அதிகாலை சூரிய ஒளி அறையினுள் படரும் வரை இரவில் இருந்த நிலையிலேயே இருந்தனர். மதி தான் முதலில் கண் விழித்தான். பாட்டியும் உறங்கக் கண்டு... இரவு முழுவதும் இப்படியே உறங்கி விட்டோமே என்று நினைத்தவன் வசுவுக்கு கால் மறுத்து போய்விடும் என்று நினைத்தவன் கவினையும் உதயையும் நகர்த்தி படுக்க வைத்து வசுவை நன்றாக உறங்க வைத்தான். வசு அவன் எழுந்ததும் விழித்தாலும் கண் திறக்கவில்லை. அவர் தான் இரவு முழுவதும் உறங்கவில்லையே... இப்பொழுது உறங்கத் தொடங்கினார். கட்டில் 3 பேர் தாராளமாகத் தூங்கும் அளவு பெரியது. மதி எழுந்து ப்ரஸ் ஆகிவிட்டு வேணியிடம் சென்று அவர்களை எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டு ஜிம் சென்று வந்தவன் அவனின் காதலியிடம் வந்து சேர்ந்தான். அது வேறு ஒன்றும் இல்லை. வீட்டின் இடது புறம் உள்ள முல்லைக் கொடியின் அருகில் செவ்வந்திப் பூச்செடி வைத்து இருந்தார் வசு. அதன் நிறம் மற்றும் மணம் இரண்டிற்கும் அடிமை ஆனவன் தான் இதுவரை அதிலிருந்து மீண்டானில்லை. கவினுக்கு எப்படி ஜாதிமுல்லை பிரியமோ அதே போன்று உதய்க்கு தாழம்பூ மணம் பிரியம். மூவரும் அடிக்கடி தன் காதலி இவள் என்று பேசிக் கொள்வர். இளவயதில் இருந்து மூவரும் காதலித்துக் கொண்டு இருக்கின்றனர். என்றும் முதல் காதல் அழியாது அல்லவே😍...
டேய் நீ மட்டும் உன் ஆள பார்க்க வந்துட்ட என்னை எழுப்பலாம் இல்ல...",கவின்.
"நீ தினமும் இங்கே தான் டா இருக்க... நான் நாளைக்கு கிளம்பிடுவேன். அப்புறம் நான் இல்லாம என் டார்லிங் கஷ்டப் படுவா இல்லயா..", மதி.
"சரி சரி.. நான் உங்கிட்ட ஒண்ணு கேட்கனும் டா..", கவின்.
"சொல்லு டா", மதி.
"உனக்கு நிஷா மேல இன்டெரெஸ்ட் இருக்குதா. உனக்கு ஓகே வா இல்ல வசுக்காக ஒகே சொன்னியா...", கவின்.
"ஏன் அப்படி கேக்குற... என் சம்மதம் இல்லாம பியூட்டி எதுவும் செய்ய மாட்டாங்க தெரியும் தான", மதி.
"நான் உனக்கு சம்மதமானு கேட்டேன்", கவின்.
"சம்மதம் தான்டா...", மதி.
VOUS LISEZ
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
Roman d'amourகாதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?