மதி காலையில் ஆறு மணிக்கு கையில் டீ உடன் கவின் அறைக்கு வந்தவன் அவனை எழுப்பி சுத்தம் செய்ய அனுப்பிப் பின் டீயினைப் பருகச் செய்தான். கவினுக்கு இருந்தத் தலைவலி இப்பொழுது பரவாயில்லை என்பது போல் இருந்தது. இருவரும் சிறிது நேரம் தோட்டத்தில் நடந்து கொண்டே உரையாடி விட்டு வீட்டினை அடைந்தனர்.
"கவின் பாட்டி உங்கிட்ட பேசனும் சொன்னாங்க... மதி நீயும் போப்பா. வந்து சாப்பிடுங்க... ", வேணி.
"உதய வர சொல்லு வேணி. அவன் கிட்ட பேசனும்", சந்திரன்.
"சரிங்க", வேணி.
"வசு.. இன்னும் கர்ண காவியம் முடியலையா", கவின்.
"வா டா.. அது முடியட்டும். நீ என்ன சொல்ற... உன் கலயானத்துக்கு நீ பொண்ணு பாத்தாச்சா... இல்லை நான் பார்க்கனுமா..", வசு.
"அதுலாம் அவனே பார்த்துருப்பான் பியூட்டி. என்னடா கவினு", மதி.
"என்ன சொல்ற கவினு. நீ சொன்னாதான் உங்கள் கல்யாணம் ஒன்னா வைக்க முடியும்", வசு.
"இப்போ வேண்டாம் வசு. கல்யாணம் செய்ய இப்போ வயசு இல்லை. அப்புறம் செய்யலாம். மதியும் நானும் அப்புறம் பண்ணிக்குறோம்", கவின்.
"உனக்கு வேண்டாம் அப்படினா சரி. அவனை ஏன்டா இழுக்குற... அவனுக்கு சீக்கிரம் பன்னினா உனக்கு என்ன", வசு.
"பியூட்டி கவினுக்கும் எனக்கும் ஒன்னா நடக்கனும். இப்போ உதய் மட்டும் பாருங்க", மதி.
"உங்களுக்கு இந்த ஒரு வருடம் தான் டைம். அதற்கு அப்புறம் என்ன கேட்கக் கூடாது சொல்லிட்டேன்", வசு.
"தேங்க் யூ வசு", என்றவன் வசுவின் கன்னத்தில் முத்தம் இட்டு ஓடிவிட்டான்.
"பியூட்டி மீ", என்று மதி வரவும்
"அடிங்க. ஓடுங்கடா... ", வசு திட்ட
மதி புன்னகைத்துக் கொண்டே சென்று விட்டான்.
மதியும் கவினும் ஆபிஸ் கிளம்பி கீழே வந்தனர்.
YOU ARE READING
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
Romanceகாதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?