அத்தியாயம் - 23 💜

43 2 0
                                    

அத்தியாயம் - 23 💜

"வந்து மூணு நாள் தானே ஆகுது அதுக்குள்ள கிளம்பணுமா.. இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போகலாம்ல" முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு மெத்தையில் பரப்பி இருந்த துணிகளை ஒவ்வொன்றாக மடித்து பெட்டியில் அடுக்கிக் கொண்டே கேட்டாள் யுவதிகா.. அவள் கூறியதில் ஆளுக்கொரு வேலையில் மூழ்கி  இருந்த ஆதியும் துருவும் அவளின் இரு பக்கமும் வந்து அமர்ந்து கொண்டார்கள்.. துருவ் அவளின் தலையை மெதுவாக வருடிக் கொண்டே "குட்டிமா மாமாக்கு இவ்ளோ நாள் லீவு கொடுத்ததே பெருசுடா.. ஆதியும் தேவ்வும் சொந்தமா  கம்பெனி ஸ்டார்ட் பண்ணி மூணு மாசம் தானே ஆகுது.. அவங்க அதைப் போய் பார்க்கணுமா இல்லையா.. நீ இப்படி மூஞ்ச தொங்க போட்டுட்டா நாங்க எப்படி சந்தோஷமா ஊருக்கு போக முடியும்" என்று கூற ஆதியும் அவளின் தோள்களின் மேல் கைகளை போட்டு அனைத்தவாறு சமாதானம் செய்து கொண்டிருந்தான். 

அவர்களின் அருகில் இருந்த தேவ் மனதில் "ச்சோ.. இவனுங்க வேற.. பாசமழைய  பொழிய ஆரம்பிச்சுட்டாங்களா.. சும்மா இருக்குறவளுக்கு கொம்பு  சீவீவிடுவதே இவங்க ரெண்டு பேரும் தான்.. அவ ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு அழுது கேட்ட உடனேயும் வீட்ல இருக்கிறவங்களை எல்லாம் சமாதானப்படுத்திட்டு அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சிட்டு இவ்ளோ நாள் இதுக்க ரெண்டும் அங்க ஃபீல் பண்ணிக்கிட்டு இருந்துச்சுங்க இப்ப இவ இங்க ஃபீல் பண்ணி சீன போட்டுக்கிட்டு இருக்கா.. இப்ப நம்ம   என்ட்ரி கொடுக்கலைன்னா இதுங்க டிராமாவ முடிக்காதுக" என்று நினைத்து பெருமூச்சு விட்டவன் அவளின் அருகில் சென்று குனிந்திருந்த அவளின் தலையை நாடி பிடித்து நிமிர்த்தி "ரொம்ப ஃபீல் பண்ணாத நீயும் ஊருக்கு கிளம்பு உனக்கும் சேர்த்து தான் டிக்கெட் புக் பண்ணி இருக்கேன் வா போலாம்" என்று கூறி அவளின் கை பிடித்து இழுக்க பட்டென்று அவன் கைகளை தட்டி விட்டவள் அவனை முறைத்து தள்ளினாள். 

"என்னடி முறைக்கிற முட்டை கண்ண தோண்டிடுவேன் பாத்துக்கோ.. அவ்வளவு பாசம் இருக்கிறவ எதுக்கு  எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்த..  போகாதடினு எவ்வளவு சொன்னேன் கேட்டியா இப்ப என்ன சீன் போட்டுட்டு இருக்க" என்று கூறி நடு மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தான் "ஆஆஆஆ…   வலிக்குது எரும மாடே.. " தலையில் தேய்த்துக் கொண்டே எழுந்து வந்து அவனை அடிக்க முயன்றாள்.. தேவ் அவளிடம் இருந்து தப்பித்து அங்கும் இங்கும்  ஓட இவளும் அவனைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று வீட்டையே ரணகளம் ஆக்கிக் கொண்டிருந்தனர் இருவரும். 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Donde viven las historias. Descúbrelo ahora