அத்தியாயம் - 35 💜

58 3 1
                                    

அத்தியாயம் - 35 💜

பிறை நிலவின் ஒளியே அறியாத அளவிற்கு இருளில் மூழ்கி இருந்தது அந்த அறை.. தாராளமான அந்த அகன்ற மெத்தையின் விளிம்பில் சுருண்டு கிடந்தவளுக்கு விழிப்பு தட்ட கொஞ்சம் கொஞ்சமாக விழிகளை திறந்து மூடியவள் மீண்டும் தன் நித்திரையை தொடர விழிகளை மூடித் திறந்த அரை  வினாடியில் கண்ட காட்சியில் மூடிய இமைகளுக்குள் கருமணிகள் உருண்டது.. சட்டென விரிந்த கருந் திராட்சை விழிகள் எதிரே இருந்தவனை பார்த்து  துள்ளித் துடிக்கும் மீனைப் போல் படபடத்தது..

ஆழ்ந்த நித்திரையிலிருந்து சட்டென கலைந்தவள் அவன் விழிகளில் தன் விழிகளை கலக்கவிட.. இரு விழிகளின் கலப்பு இருவரின் பார்வையில் இணைந்து அவள் விழிகளில் உவர் நீரைச் சுரந்தது.. ஏன் என்று அவளுக்கே புரியவில்லை இரண்டு வாரம் என்று சொல்லிச் சென்றவன் இன்றோடு ஒரு மாதமாகிவிட்டது.. வெகு நாள் கழித்து காண்பதால் பிரிவினால் வந்த கண்ணீரோ.. ஆனால் ஏன்? கடந்து சென்ற மேகங்களாய் நான் என் வாழ்வின் சில பக்கங்களில் கடந்து செல்ல இருக்கும் உறவு அவன்.. அவனுக்காக ஏன் இந்த கண்ணீர்.. 

கண்டவுடன் காதல் என்பவர்களை பார்த்து துச்சமாய் எண்ணி கடந்து சென்றவள் தான்.. ஏனோ இவன் தன் காதலை சொன்னவுடன் கற்சிலையாய் சமைந்ததேனோ.. இந்த ஒரு மாத காலமாக காணும் இடங்களில் எல்லாம் கண்களில் நின்றாடுகிறது அவன் முகம்..  அவன் கூறிய காதலை அவன் கண்களில் கண்டவுடன் அதை மனது உண்மை என்று நம்பினாலும் மூளை ஏனோ ஏற்க மறுக்கிறது.. 

காண்போரை எல்லாம் தன்னில் கரைய செய்யும் கள்வனவன்… மாயக்காரன்.. என்னையும் சர்க்கரையாய் அவனுள் உருக வைக்கிறானே என்று எத்தனையோ நாள் வசைப்பாடி இருக்கிறாள்.. ஆனால் இன்று நேரில் கண்டவுடன்  கண்ணீரும் அவன் முன் உருகி நிற்கிறதே.. தன் அருகே அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவன் நிஜம் தான் என்று உணர்ந்த பின்பும் இது நிச்சயம் கனவுதான் சிறிது நேரத்தில் காற்றோடு கலைந்து விடுவான் என்று பொய் நம்பிக்கை கொண்டு படுத்தபடி அவனையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Donde viven las historias. Descúbrelo ahora