அத்தியாயம் - 21 💜

48 1 3
                                    


அத்தியாயம் - 21 💜

கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில், கண்களில் வலிந்த கண்ணீரோடு சிறு விசும்பலோடும் மீனாக துள்ளிக் கொண்டு அந்த உருவத்தின் தோளிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தவள் "ஏய்.. துள்ளாம  இருடி குள்ள பூதம்" என்ற  மிகவும் பரிச்சயமான அவனின் குரலில் தான் உடல் நடுக்கம் குறைந்து மனது அமைதியானது அவளுக்கு…  மேலும் தன்னைக் காக்க போராடியதில் சக்தி மொத்தமும் தளர்ந்து உடல் சோர்வடைந்து அவனின் தோள் மீதே வாகாக நன்கு படுத்து கொண்டாள். 

சிறிது நேரம் கழித்து ஒரு அறையின் உள்ளே நுழைந்தவன் அங்கிருந்த கதிரையில் அவளை அமர வைத்து "ரொம்ப பயந்துட்டியாடி குட்டச்சி" என்று பற்கள் தெரிய அழகாய் சிரித்து அவள் முகம் நோக்க அவனை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள் யுவாதிக்கா. 

"டேய் தேவ் மொத அவ கட்ட அவுத்து விடுடா" என்ற கதிரின் குரலில் இவனிடமிருந்த பார்வை கதிரை நோக்கி தீயாக சுட்டது. "ஆத்தி பார்வையிலே எரிச்சிடுவா போல இருக்கு.. சீக்கிரம் கட்ட அவுத்து விடுடா" அவளின் பார்வையிலிருந்த கோபத்தை கண்டு கொண்ட கதிர் "இங்க பாரு யுவா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எதுனாலும் நீ தேவ் கிட்ட டீல் பண்ணிக்கோ..  சமாதானம் ஆகிட்டு கேன்டீன் பக்கம் வாங்க நான் முன்னாடி போறேன் பின்னாடி பொறுமையா வாங்க" என்று கூறிக்கொண்டே அவளிடம் இருந்து தப்பித்து ஓடினான். 

கட்டு விடுபட்டது தான் தாமதம் அடுத்த நொடியே அவன் மீது பாய்ந்து உண்டு இல்லை என்று நொறுக்கி எடுத்து விட்டாள் "உன்ன 

 உயிரோடு விட மாட்டேன்டா மாங்கா.. எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? உயிரே போயிடுச்சு" என்று அவளது பலம் மொத்தமும் திரட்டி அடித்துக் கொண்டிருக்க அவனோ எறும்பு கடித்தார் போல் அமர்ந்திருந்தான்.. 

சிறிது நேரம் அவளிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தவன் சிரித்துவிட்டு அவளின் இரு கைகளையும் இறுக்கப்பற்றிக் கொண்டான்..

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Dove le storie prendono vita. Scoprilo ora