7

7.6K 243 30
                                    

தலை கிண்ணென்று வலிக்க ஒன்றும் புரியவில்லை..

சற்று முன் ஒரு பெண் தன் வண்டியின் மீது இடித்ததும் நிலை தடுமாறி கீழே விழுந்தவனின் நெற்றியில் காயம் ஏற்ப்பட்டிருக்க.,..

வலியோடு கண்ணைத் திறந்தவன் எதிரில் அவனை இடித்த அதே பெண் கண்ணில் பதற்றத்தோடும் பயத்தோடும்.,...

ஆர் யூ ஓகே மிஸ்டர் ..ஹலோ ... என அவனை உலுக்க அடிப்பட்டவனோ ....சமுத்திராவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது இதழ் அசைந்து கொண்டிருக்க அந்த வார்த்தைகள் எதுவும் அவன் காதில் விழவில்லை.அந்த வலியிலும் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவனிடத்திருந்து எந்த பதிலும் வராமலிருக்க எழுந்து தன் வண்டியிலிருந்த வாட்டர் பாட்டிலையும் முதலுதவிப் பெட்டியையும் எடுத்து வந்தாள்.

அவனெதிரில் அமர்ந்தவள் ,.,.

எடுத்து வந்த நீரை அவன் முகத்தில் தெளித்துவிட்டு.,..

தலை சுத்துதா மயக்கம் எதுவும் வர மாறி இருக்கா ,...

அதற்கு அவன் இல்லை என்பது போல் தலையாட்ட

தேங்க் காட் என்றவள்,... வாட்டர் பாட்டிலை அவனிடம் கொடுத்தாள்.

அவன் அருந்தியப்பின் நெற்றியில் வழிந்த இரத்தத்தை துடைத்து பின் காட்டனை டிஞ்சரில் நனைத்து காயத்தில் வைத்து அழுத்த .,..

அதுவரை அவளின் ஒவ்வொரு அசைவையும் கண் சிமிட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தவன் வலியில்..,

ஸ்ஆஆ.,..என்று கத்திவிட.,,

பதறியடித்து சாரி சாரி...என்றவள் ,...

கொஞ்சம் வலிக்கும் பொருத்துக்கோங்க....என அவளின் கெஞ்சும் குரலில் உருகினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் .,.
ம்ம்ம்...என்றான்.,..

காட்டனின் மீது பிளாஸ்டரை ஒட்டியவள்....

அவன் உடலில் வேறு எங்கேனும் அடிப்பட்டிருக்கிறதா என கவனித்தாள்.இடது கையில் மட்டும் சிறிய சீராய்ப்பு இருக்க அதற்கும் மருந்தைத் தடவினாள்.

இரவா பகலாWhere stories live. Discover now