21

6K 238 59
                                    

"தரன் இந்த சன்டே எங்கயாச்சும் வெளிய போலாமா ",...என்றதும் ....அவன்,.

"என்ன ஷாப்பிங்கா "...என்க,..

"ஷாப்பிங்குனும் சொல்ல முடியாது. சும்மா அப்படியே ஜாலியா சுத்திட்டு மூவி பார்த்துட்டு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு பார்க்ல விளையாடிட்டு அப்றம் வீட்டுக்கு வந்தறலாம் ஓகேவா ",,..என்றாள்.

"போலாமே ",..என சக்தி இழுக்கவும் ....

"ஹே ஜாலி அப்போ நீ உதயாவுக்கு இன்பார்ம் பன்னிடு. நான் சமுக்கு இன்பார்ம் பன்னிறேன் "....என்றவள் அவளது போனில் சமுத்திராவின் நம்பரைத் தேடினாள்.

"ஏய் மேஹா இப்போ எதுக்கு அவளுக்கு நாம வெளியபோறத இன்பார்ம் பன்ற ".., என்க.,..

"சமுவும் உதயும் நம்ம கூட வராங்க தரன் ".,.

"உதயாவேனா வரட்டும் அவ வேண்டா "...என்றவனின் குரலில் எரிச்சல் இருந்தது.

"ஏன் தரன் சமு வரதுல உனக்கென்ன பிரச்சனை,".,.என்றதும் அவளை முறைத்தவன்...

"அவ நம்மக்கூட வரது  எனக்கு புடிக்கல "...

"ஒரே வீட்ல இருக்கிங்க அடிக்கடி பார்த்துக்கிறிங்க .அப்றம் புடிக்கலனா என்ன அர்த்தம் "....

"எந்த அர்த்தமும் இல்ல.புடிக்கலனா புடிக்கல அவ்ளோ தான் "...

"சரி அவள புடிக்கலனு சொல்ற அதுக்கான சரியான ரீசன சொல்லு. நான் ஏத்துக்கிறேன்.",..என்றதும் அவன் வேகமாக.,.

"அவ சின்ன வயசுலருந்து இப்ப வரைக்கும் ",,.என தொடங்க...

"சும்மா சைல்டிஷ்ஷா உன்னோட ஸ்டுப்பிட் சைல்டுஹுட் ஸ்டோரிய சொல்லாத.அத கேட்டு என் காதுலருந்து பிளட் வந்தது தான் மிச்சம் "..,என்றவளின் குரலில் கோவம் அப்பட்டாமாக தெரிந்தது.

மேஹா சக்தியை விரும்புகிறாள் என்பது உண்மை தான்  என்றாலும் அவள் சமுத்திராவின் விஷயத்தில் சக்திக்கு துணைப் போகமாட்டாள்.மேஹாவிற்கு நெருங்கிய பெண் தோழி இல்லையென்ற குறையை தீர்த்தவளாயிற்றே.

"நீ தான் தேவையில்லாம எப்ப பார்த்தாலும் அவள திட்டுற.நான் உன்னப் பத்தி அவக்கிட்ட பேசும்போதெல்லாம் அமைதியா இருந்திருக்காளே தவிர உன்ன என்னக்குமே திட்டுனதோ இல்ல உன்னப் பத்தி தப்பா பேசுனதோ இல்ல"....என்றவள் தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும்.,..

இரவா பகலாWhere stories live. Discover now