அடுத்த நாள் காலையில் சீக்கிரமே எழுந்தவள் .நீராடி அவளது அலமாரியை திறக்க அதில் அத்தனை உடைகள் இருந்தாலும் எதை போடுவது என்று குழப்பமாக இருந்தது அவளுக்கு .
ஒவ்வொன்றாய் எடுத்து எடுத்து பார்த்தவள் கிட்ட தட்ட அரை மணி நேரமாக அலமாரியையே அலங்கோலப் படுத்தியும் ஒரு உடையையும் தேர்வு செய்யாமல் இருந்தால் .மனதிற்குள் "என்னடா இது மேலாப்புல என்ன இருக்கோ அத எடுத்துட்டு போயிருவேன் இன்னைக்கு இப்டி உருட்டிட்டு இருக்கேனே "என்று நினைத்தவள் "எல்லாம் இவனால்" என்று அவனை செல்லமாக மனதுள் திட்டியவள் நேற்று அவள் புடவை அணிந்திருந்தபோது அவன் வைத்த கண் வாங்காது பார்த்தது ஞாபகம் வர தன்னிடம் இருந்த 3 சேலைகளில் அவனுக்கு பிடித்த அடர் நீல நிறத்தில் இருந்த designer சேலையை உடுத்தி கொண்டவள் எப்பொழுதும் அவள் செய்யும் மிதமான ஒப்பனையுடன் அவனை காணும் ஆவலுடன் வெளியே வந்தவள் "அம்மா coff...."என்று கூறுமுன் அவள் வார்த்தை தடை பட்டது அவன் தரிசனத்தால்.
அடர் நீளத்தில் சட்டையும் சந்தன நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தவன் அங்கே ஒரு sofaavil அமர்ந்திருக்க அவனுக்கு எதிரில் இருந்த ஒரு sofaavil அவள் அப்பாவும் அம்மாவும் அமர்ந்திருக்க அதற்கு அருகில் பதட்டமாக நின்றிருந்தான் ஹரி விக்னேஷ் .
அவளை கண்டவன் தனது புன்முறுவலுடன்"குட் மார்னிங் சது உனக்காக தான் வெயிட் பண்ணேன் "என்க
அவளுக்கோ மண்டைக்குள் "அட ஊதுங்கடா சுங்குஹ் "என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது .
ஹரியின் அருகில் வந்து நின்றவள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் "தம்பி எப்படா வந்தான் ?"என்று வினவ
அவனோ"10 நிமிஷமாச்சு அவரு வந்து ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் சதுவும் வரட்டும்னு உக்காந்துருக்காரு எதை பத்தி பேச போறாருனு தெரிலடி"என்க அவன் எதை பற்றி பேச வந்திருப்பான் என்பதை ஊகித்தவள் அவனிடம் கண்களால் கெஞ்சிக்கொண்டிருந்தால் வேண்டாம் என்று அவனோ அவளை சட்டை செய்யவே இல்லை .
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.