16

5.6K 265 54
                                    

அடுத்த நாள் காலையில் அழுகுரலாய் கேட்க கண்விழித்த வித்யுத் அதிதி தூக்கத்தில் முனங்க அவளை தட்டி கொடுத்து மீண்டும் உறங்க வைத்தவன் கண்ணை கசக்கி கொண்டே அம்மாஆ...என்று வெளியே வந்தவன் அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்றான்.

தினம் அவன் எழுந்ததும் முத்தமிட்டு அவனை தூக்கி கொஞ்சி,அவனுக்கு தலை வாரி,அவனின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்து ஒரு தாய் என்பதை விட நல்ல தோழியாய் மாரிலும் தொழிலும் போட்டு விளையாடி சிரிக்க வைத்த அவன் தாய் இன்று பேசாது தரையில் படுத்திருந்தாள் உயிரற்ற ஜடமாய் .

அவனை கண்ட வாசுகி மேலும் அழ அவன் திக்ப்ரம்மை பிடித்ததை போல் அவள் அருகில் சென்று அமர்ந்தான் .சிறிது நேரத்தில் உறக்கம் களைந்து எழுந்து வந்த அதிதி அனைவரும் அழுவதை பார்த்து பயந்து சாருவின் பிணத்தின் அருகே சென்று அமர்ந்தவள் ஏதும் புரியாமல் அவளின் பிணத்திடம் "அம்மா யாருமா இவுங்கல்லாம் ஏன் அழுறாங்க பயமா இருக்குமா ஏன்மா இவ்ளோ நேரமா தூங்குற எந்திரிமா "என்று அவளை உலுக்க அவளோ என்றும் எழ முடியாத நிலையில் படுத்திருந்தாள் அவள் மேலும் மேலும் உலுக்கியும் அவள் எழாது போக நிதர்சனம் உரைக்க பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் அதிதி.

அது வரை உறைந்து இருந்த வித்யுத் அதிதியின் செயலை பார்த்து கண்ணீர் திரை இட நிதர்சனம் உரைக்க "அம்மாஆஆ "என்று பெருங்குரலில் அழ ஆரம்பித்தான் .விஷயம் எப்படியோ தெரிந்து வந்த விஸ்வாவிற்கே அவளை அந்த நிலையில் கண்டதும் இதயம் ஒரு முறை நின்று விட்டது .

அவளை கண்டது முதல் இன்று வரை அவளுடன் வாழ்ந்த நாட்கள் நினைவில் வந்தது .சொத்தை வாங்கி விட்டு அவளை ஏமாற்ற நினைத்தானே ஒழிய அவள் இறக்க வேண்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை .ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் அவன் தலையை களைத்து குட் மோர்னிங் சொல்லுவது முதல் உறங்கும் பொது அவன் மார்பில் தலை வைத்து உறங்குவது வரை அவனின் ஒவ்வொரு செயலிலும் அவள் நிறைந்திருந்தால்.அவளுக்கு கருத்தடை மாத்திரை கொடுத்தான் தான் ஆனால் அவள் முதல் முறை வித்யுதே பெற்றெடுக்கும் போது கதறியது அவனுக்கு அதீத வலியை தான் கொடுத்தது அதனாலேயே மீண்டும் ஒரு முறை பிள்ளை பெற்றெடுக்க கூடாது என்று முடிவுடன் இருந்தான் .ஆனால் அதிதியின் பிரசவம் மிகவும் சிக்கலாக இருக்க அவள் உயிர் போய் உயிர் வந்தது மரண வலியை அவளுக்கு கொடுத்த அதிதியின் மேல் அவனுக்கு பாசம் இல்லாது போனது .ஆனால் இது எதையும் அவள் உயிருடன் இருந்த பொது உணராதவன் அவள் சாவதை கண்டதும் உணர்ந்ததை காலத்தின் கோலம் அன்றி என்ன வென்று கூற.காரணம் இன்றியா காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் என்று கூறினர்.

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now