18

5.8K 245 52
                                    

கீழே இருவரும் சிரித்துக்கொண்டே வந்தனர் பின் அதிதியின் அறைக்கு வந்தவள் அவள் கையை அழுத்தி விட்டு இனி டெய்லி உன்ன வந்து பாப்பேன்டா என்றவள் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவனுடன் புறப்பட்டாள்.அவன் தோளில் கை போட்டு அவள் உக்கார .

வீட்டை தாண்டி சிறிது தூரம் வந்தவன் வண்டியை நிறுத்தினான் .

அவள் "ஏன்டா வண்டியை நிறுத்தின ?"என்க

அவளை நோக்கி மெலிதாய் சிரித்தவன்"ஏதோ ஒன்னு மிஸ் ஆகுது"என்றவன்

அவள் "என்ன?" என்க தோளில் இருந்த அவள் கையை எடுத்து தன் இடையோடு சேர்த்து கொண்டு அவள் கையை பற்றி அவளை தனக்கு மேலும் நெருக்கமாக அமர்த்தி கொண்டவன் இப்போ சரி ஆயிருச்சு என்று அவளை பார்த்து கண்ணடித்தவன் அவளோடு அவள் வீட்டிற்கு வந்தான்.

இருவரும் மகிழ்ச்சியாய் இறங்கி கையோடு கை கோர்த்துக்கொண்டு வர அவர்களை கண்ட அவள் அம்மா ராஜி"வாங்கப்பா என்ன இவ்ளோ நேரம் ஆச்சு சாப்டீங்களா?"என்க

அவளோ "இல்ல மா..."என்க

அவனோ "என் ராஜீ டார்லிங் சாப்பாடை நா மிஸ் பண்ணுவேனா அதான் அவளை கூட்டிட்டு இங்கயே வந்துட்டேன் என்ன ஸ்பெஷல் டார்லிங்"என்க சிரித்த

அவள் அப்பா "பிரியாணி தான் மாப்ள வாங்க எல்லாரும் சேந்து சாப்பிடலாம் "என்க

அவனோ "மணி இவ்ளோ ஆச்சு இன்னுமா நீங்கல்லாம் சாப்பிடாம இருக்கீங்க ?"என்று வினவ

ஹரியோ "அந்த சோக கதையை ஏன் மாமா கேக்குறீங்க நீங்களும் இவளும் வந்தா தான் ஆச்சுன்னு என் அம்மா என் கண்ணுல சிக்கன் pieceah காட்டஹ் கூட இல்ல "என்று கூற

சைந்தவி "எது சிக்கென்னாஹ் ???"என்றவள் அவனையும் இழுத்து கொண்டு சாப்பாடு மேஜையில் அமர்ந்து விட்டால் அவளின் செயலை பார்த்தவர்களுக்கு சிரிப்பு வர

அவளோ "அம்மா பசிக்குதும்மா நீ என்னம்மா சிரிச்சுட்டு இருக்க வாமா சாப்பிடலாம் என்றவள் தட்டை எடுத்து வைத்து அனைவர்க்கும் பரிமாற ஆரம்பித்தாள்.அனைவரும் பேசிக்கொண்டே உண்டனர்.

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now