30

4.9K 239 46
                                    

வித்யுதிடம் சென்று அண்ணா என்ன ஆச்சுடா என்று கெட அதிதிக்கு எனோ கண்ணீர் நிற்காமல் கரை புரண்டோடியது அவளை பார்த்து நிமிர்ந்த வித்யுத் உணர்ச்சியற்ற முகத்தை காட்டியவன்"உன் சந்தோஷம் ஹாஸ்பிடல்ல இருக்கு என் சந்தோஷம் எங்க போச்சுன்னே தெரில"என்க

அதை கேட்ட அதிதி உணர்வுகள் மரத்து தரையில் கால் மடங்கி அமர்ந்து விட்டால்.அவளின் இந்த செய்கையை பார்த்த ஹரியின் அப்பாவிற்கு ஏதோ புரிவதை போல் இருக்க அனால் இந்த நேரத்தில் அதை ஆராய அவர் விரும்ப வில்லை.அவள் விழுந்ததை பார்த்த நவ்யா "அதிதி "என்று அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் முதுகை ஆதரவாய் நீவி விட்டு கொண்டிருக்க அதிதிக்கு கண்ணீர் நிற்காமல் கன்னத்தை நனைத்து கொண்டிருந்தது .

அடுத்த 5 நிமிடத்தில் கார் வர ஹரியின் அம்மாவும் அப்பாவும் கிளம்பி செல்ல தயாராக எழுந்த அதிதி "அத்தை நானும் வரலாமா ப்ளீஸ்"என்று கண்ணீருடன் கேட்க சற்று யோசித்தவர் அவளையும் அழைத்து சென்றார் .இங்கே வீட்டில் வித்யுதும் நவ்யாவுமே எஞ்சி இருக்க அவனின் இறுக்கமான தோற்றத்தை பார்த்த நவ்யா அவன் அருகில் வந்து அமர்ந்து அவன் தோளில் கை வைத்தவள் "பையா க்யா ஹுவா சையு திதி கஹா ஹெய்ன்?aur ஹரி பையா கோ கைஸே அச்சிடேன்ட் ....(அண்ணா என்ன ஆயிற்று சையு அக்கா எங்கே ஹரி அண்ணாவிற்கு எப்படி அச்சிடேன்ட்.....)என்க அவளை பார்த்து விட்டு ஏதோ சொல்ல விழைய அதற்குள் அங்கே அவன் அழைத்ததை போல் அர்ஜுனும் கார்திக்க்கும் படபடப்புடன் வந்தனர் .அவர்களுடன் விஸ்வ வும் வந்திருந்தார்

.உள்ளே வந்த அர்ஜுன் "ஹே வித்யுத் என்னாச்சு ஏதோ ரொம்ப அவசரம்னு கால் பண்ண இவரையும் கூட்டிட்டு வர சொன்ன என்னாச்சு எனி ப்ரோப்லேம் ?"என்க விஷுவாவிடம் சென்ற வித்யுத் "என் சது எங்கே?"என்க

அவருக்கோ ஒன்றும் விளங்கவில்லை "வித்யுத் எனக்கு எப்படிப்பா தெரியும் சைந்தவி காணாமா ?"என்க

அவனோ மீண்டும் நிதானமாய் "நடிக்காதீங்க என் சையு எங்கே?"என்க ,

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now