அத்தியாயம் - 21

8.8K 301 51
                                    

அவள் அறைக்குள் நுழைந்தவன், அவள் இருந்த நிலை கண்டு அதிர்ந்தான். அவள் கட்டிலை விட்டு கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். "மாயா! என்னாச்சு?" அவன் பதற்றமாக வினவிக் கொண்டு வந்தான். அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பதில் எதுவும் பேசவில்லை. "என்னாச்சு மாயா?" அவன் பரிவுடன் கேட்க, "கீழ விழுந்துட்டேன்😟" அவள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினாள்.

"எப்படி கீழ விழுந்த? வா எழுந்திரு!" அவன் அக்கறையாக அவள் கைபிடித்து தூக்கி கட்டிலில் அமர வைத்தான்.

அவள் திடீரென்று "அம்மா!" என்று அலற, அவன் மேலும் பதட்டமானான். "என்னாச்சு?"

"கால் ரொம்ப வலிக்குது" அவள் கண்ணீருடன் கூற அவனுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. "கொஞ்சம் பொறுத்துக்கோ! எதாவது தைலம் இருக்கா?" அவன் கேட்க, "அந்த கப்போர்ட்ல ஸ்ப்ரே இருக்கு" அவள் பக்கத்தில் இருந்த அலமாரியை காட்டினாள். அவனும் அவள் சொன்ன இடத்தில் இருந்து மருந்தை எடுத்து அவளுக்கு முதலுதவி செய்தான்.

"பாத்தா சுளுக்கு மாதிரிதான் இருக்கு. இந்த மருந்துக்கு சரி ஆயிருச்சுனா எந்த பிரச்சனையும் இல்ல. கால் வீக்கம் வந்தா சாயங்காலம் டாக்டர் கிட்ட போய் பாத்துட்டு வரலாம்" அவன் ஆறுதலாக பேச அவளும் கண்ணீருடன் தலை அசைத்தாள்.

"சரி! எப்படி கீழ விழுந்த?" அவன் முன்பு கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு முறை கேட்க, அவள் திருதிருவென விழித்தாள். அவன் என்ன என்பதை போல் பார்க்க, அவள் அவன் வருவதற்கு முன் நடந்ததை நினைத்து பார்த்தாள்.

குளித்துவிட்டு அறைக்குள் நுழைந்தவள், அவள் கைபேசியில் அவளுக்கு பிடித்த பாடல் பாடிக் கொண்டு இருக்க, அவள் அதற்கு ஏற்றவாறு நடனம் ஆடிக் கொண்டு கட்டிலை அடைய முற்பட்டாள், எதிர்பாரா விதமாக அவள் கால் இடறி கீழே விழுந்து விட்டாள். எப்படியாவது எழுந்து விட வேண்டும் என்று எண்ணி பல முயற்சிகள் செய்தாள். ஆனால் அது எதுவும் கைகொடுக்காமல், அவள் கணவனின் உதவியுடனே எழுந்திருக்க முடிந்தது.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now