இரண்டு வருடங்களுக்குப் பிறகு,
கல்லூரிப் படிப்புடன் அவள் விரும்பிய டிசைனிங் பயிற்சியையும் மாயா முடித்திருந்தாள். குறுகிய காலத்தில் மிக சிறந்த ஆடை வடிவமைப்பாளராக உருவாகி இருந்தாள். அடுத்த வருடம் டெல்லியில் நடைபெறவிருக்கும் ஆடைக் கண்காட்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது அவளது நீண்ட நாள் கனவு.
அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தாள்.
"மாயா!" கஸ்தூரி மாயாவை அழைக்க, "வரேன் மா" என்று அவள் கீழே சென்றாள்.
"சொல்லுங்க!"
"உன்னோட படிப்பு மத்த கோர்ஸ் எல்லாம் முடிஞ்சிருச்சு. மாப்பிள்ளை வீட்டுக்கு எப்போ போகலாம்னு முடிவு பண்ணி இருக்க?" அவர் கனிவாக கேட்க, அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது.
"நீங்க என்ன நினைக்கிறீர்களோ அதையே செய்ங்க. நீங்க என்ன சொன்னாலும் எனக்கு அதுல சம்மதம்" புன்னகையுடன் பதில் அளித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
மகளின் மலர்ந்த முகத்தை பார்த்த கஸ்தூரியின் மனமும் பூரித்தது. அவள் எண்ணியவாறு மகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க போவதை நினைத்து மனம் மகிழ்ந்தார்.
மாறன் என்ற பெயரை கேட்டாலே அவளுக்குள் எல்லையற்ற மகிழ்ச்சி பெருகிடுவதை அவள் உண்ந்தாள். அவள் வாழ்வில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்பதை அவள் ஒரு போதும் நினைத்து பார்த்திருக்கவில்லை. அவனிடம் சண்டையிட்ட நட்க்களை எண்ணிபார்த்து அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அதுவும் ஏதோ ஒரு வகையில் அவளுக்குள் மகிழ்ச்சியை விளைவித்ததை அவள் உணர்ந்தாள்.
அவள் வாழ்வில் அவன் சம்பந்த பட்ட அனைத்தும் அவளுக்கு மிகவும் முக்கியமானதாக பட்டது. அந்த மாற்றங்கள் அனைத்தும் அவளுக்கு வியப்பாகவே இருந்தது. இருப்பினும் அந்த உணர்வுகளுக்கு பெயர் என்ன என்று தெரியாமல் இருந்தாள். இதுதான் காதலா? என்று மனதில் கேள்வி எழும், அதற்கு அவளுக்கு பதில் தெரியாமல் அதை அவளுக்குள்ளே மறைத்துக் கொள்வாள்.
YOU ARE READING
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Romanceஎதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..