மீனா தொடர்ந்து அழுது கொண்டு இருந்தாள். மாயா அவள் கூந்தலை மென்மையாக கோதி, அவளை சமாதானம் செய்ய முற்பட்டாள். ஆனால் மீனாவோ அவள் வாழ்வில் நடந்தவற்றை எண்ணி மனம் வெம்பி அழுது கொண்டே இருந்தாள்.
"மீனு இந்தா தண்ணி குடி, இப்படி அழுதா உடம்பு என்ன ஆகும். தல வலி வரும், முதல் இந்த தண்ணிய குடி. என்னாச்சு சொல்லு. என்கிட்ட சொன்னா உனக்கு கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்" மாயா ஆதரவாக அவள் முகம் பற்றி கேட்க, மீனாவுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது.
ஒரு பெருமூச்சுடன், மாயா கொடுத்த தண்ணீரை குடித்து விட்டு மாயாவை பார்த்தாள்.
"என்ன ஆச்சு டா?" மாயா அவள் தலை கோதி கேட்க,
"நான் சொல்லிருகேன்ல நா ஒருத்தர காதலிக்கிறேன்னு. அவரு பேர் சிவா" மீனா மாயாவின் முகம் பார்க்க, மாயா மேலும் சொல் என்பது போல் அவளை பார்த்தாள்.
"நான் என்னோட படிப்பு முடியுர வரைக்கும் அவர்கிட்ட பேச வேண்டாம்னு இருந்தேன். அவரும் அத புரிஞ்சு கிட்டுதான் அவரு அமைதியா இருக்காருனு இவ்வளவு நாள் நினைச்சுட்டு இருந்தேன். நேத்து ஆசையா அவர பாக்க போனேன்....
முந்தைய நாள்,
"ஹலோ சிவா! எப்படி இருக்கீங்க?" மீனா உற்சாகமாக கேட்க, "நல்லா இருக்கேன்! நீங்க???" அவன் அவ்வாறு கேட்பான் என்று அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை.
"நான் மீனா பேசுறேன்" அவள் குரல் தலுதலுத்தது. "ஓ! மீனா! சாரி மீனா, நிறையா போன் நம்பர் மிஸ் ஆயிருச்சு. எப்படி இருக்கீங்க?" அவன் இயல்பாக பேச ஆரம்பித்தான். அவளும் அவனிடம் நீண்ட நாட்களுக்கு பின் பேசும் மகிழ்ச்சியில் அதை எதையும் பொருட்படுத்தவில்லை.
"சரி உங்ககிட்ட பேசணும் மீட் பண்ணலாமா?" அவள் ஆர்வமாக கேட்க, அவன் சிறிது நேரம் யோசித்து இறுதியில் ஒப்புக் கொண்டான்.
மீனா நீண்ட நாட்களுக்கு பின் அவனை சந்திக்கும் மகிழ்ச்சியில் அவனை பார்க்க உற்சாகமாக கிளம்பி சென்றாள்.
YOU ARE READING
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Romanceஎதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..