"இன்னிக்கு ஒரு படம் பாத்தோமே! அதுல நடந்த மாதிரி உங்களுக்கும் கடவுள் நம்ம கல்யாண சமயுத்துல அத மாத்துற மாதிரி ஒரு சான்ஸ் கொடுத்தா என்ன செய்வீங்க?" அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று தெரியாமல் அவனை ஆர்வமாக பார்த்தாள்.
"கண்டிப்பா இந்த கல்யாண ஏற்பாடு நடக்கிறதுக்கு முன்னாடியே இத நிறுத்தி இருப்பேன்" அவன் மேலும் பேசுவதற்கு முன் மாயா அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். "சொல்லி முடிகிறதுக்கு முன்னாடியே எங்க போற!? மாயா நில்லு" அவன் வார்த்தைகள் எதுவும் அவள் செவிகளை எட்டவில்லை. அவள் அறைக்குள் சென்று, கதவை அடைத்துக் கொண்டாள்.
தலையணையில் தலை சாய்த்து இருக்க, கண்களில் கண்ணீர் வெள்ளமாய் பெருக்கெடுத்தது. "எனக்கு தெரியும் மாமா, உங்களுக்கு இந்த கல்யாணத்துல எப்பவும் விருப்பம் இல்லனு!! இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் நீங்க என்ன ஏத்துக்க மாட்டிங்கனு இப்போ எனக்கு புரிஞ்சிருச்சு. வீட்டுக்காகவும், பெத்தவங்களுக்காகவும் தான் இந்த உறவை நீங்க ஏத்துக்கிட்டு இன்னும் வாழ்ந்துட்டு இருக்கீங்க. ஆனா நான் அப்படி இல்ல மாமா, உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்" அவள் கண்களில் கண்ணீர் மேலும் பெருகியது.
அதிகமாக அழுத சோர்வில் அப்படியே உறங்கி விட்டாள்.
அவள் சென்ற திசையை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான் அவன். "என்ன சொல்ல வந்தேன்னு கேட்காம போயிட்ட மாயா, இப்படி ஒரு சூழல் இல்லாம நல்ல படியா நம்ம கல்யாணம் நடந்திருக்கும்னு சொல்ல வந்தேன்.
உனக்கு விருப்பம் இல்லாம நடந்த கல்யாணம் உன்னோட விருப்பத்தோடு நடந்திருக்கும்னு சொல்ல வந்தேன்.
ஆனா நான் அடுத்த வார்த்தை சொல்லுறது குள்ள நீ இப்படி எதையும் கேட்காம போயிட்ட" அவன் மனதில் எண்ணிக் கொண்டு, வானத்தை பார்த்தவாறு தலைக்கு கை வைத்து படுத்தான்.
அவன் வாழ்வில் நடந்த அனைத்தும் அவன் மனதில் தோன்ற, அந்த நினைவுகள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தன.
YOU ARE READING
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Romanceஎதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..