வயலில் வேலைகளை முடித்து விட்டு, நவீனை (சிவாவின் நண்பன்) சந்திக்க புறப்பட்டான் மாறன். நவீன் வீட்டை அடைந்ததும் அவன் தாயை சந்தித்தான். "சித்தி, நவீன் இல்லையா?" அவன் வினவ, "நவீன் வெளிய போயிருக்கான் மாறா! கொஞ்ச நேரத்தில வந்திருவான். நீ உள்ள வா" என்று அவனை வரவேற்றார் நவீனின் தாய். மாறனும் உள்ளே சென்று அவரிடம் பொதுவாக பேசிக் கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் நவீன் வந்து சேர்ந்தான். "நவீன் மாறன் அண்ணா உன்கிட்ட பேசணும்னு வந்துருக்காரு" நவீனின் தாய் கூற, "வாங்க அண்ணா! சொல்லுங்க" என்றான் அவன். அவன் தாய் வேலை இருப்பதாக கூறி வெளியில் சென்று விட, மாறன் பேசத் தொடங்கினான்.
"நவீன், உன்னோட ப்ரெண்ட் சிவாவ பத்தி தான் பேசணும்" மாறன் மெதுவாக ஆரம்பிக்க, "எந்த சிவா அண்ணா?" என்றான் அவன் புரியாமல். "நம்ம ஊரு திருவிழாவுக்கு வந்த பையன் பா, பெங்களூர்ல உன்னோட ப்ரெண்ட்" மாறன் விளக்கினான்.
"ஆமா அண்ணா! அவன்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு. கடைசியா பேசின போது அவன் வெளிநாடு போக போறதா சொன்னான். எந்த நாட்டுக்கு போக போறானு கூட சொல்லல" என்றான் அவன், நடந்ததை நினைவு படுத்தி.
"ஓ!" சிவாவிற்கு மேலும் குழப்பம் ஆனது. "சரி! அவனுக்கு கல்யாணம் எதாவது முடிவு பண்ணி இருந்தாங்கலா?" மாறன் வினவ, "அப்படி எல்லாம் எதுவும் இல்லயே அண்ணா! கல்யாணம் முடிவு பண்ணி இருந்தா கண்டிப்பா எங்க கிட்ட சொல்லி இருப்பான். எனக்கு அவன் க்ளோஸ் ப்ரெண்ட் இல்ல, இன்னொரு பையன் இருக்கான் அவனும் பெங்களூர் தான், அவனுக்கு சிவாவ பத்தி பல விஷயங்கள் தெரி்சிருக்க வாய்ப்பிருக்கு அண்ணா" என்று அவனுக்கு தெரிந்ததை கூறி முடித்தான் நவீன்.
"சரி நவீன், நீ கடைசியா சிவாவ எப்போ பாத்தே?" மாறன் கேட்க, "ரெண்டு மூணு மாசம் இருக்கும் ணா" என்றான்.
"சரி, சிவாவோட ப்ரெண்ட் நம்பரும் அட்ரஸும் கொடு. நான் அவன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான். "அண்ணா அவன் பேர் தேவா, சிவாவோட க்ளோஸ் ப்ரெண்ட். இதுதான் அவன் அட்ரஸ்" என்று கூறி அவன் விலாசத்தை கொடுத்தான்.
YOU ARE READING
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Romanceஎதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..