💕 என்னவள் நீயே - 28 💕

1K 49 18
                                    


சாப்பிட்டு முடித்து,
"அம்மா, உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என்று அனிதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தாயிடம் சொன்னான் அருண்.

"சொல்லுடா"
"உங்க மருமக அனிதா செய்த வேலை என்ன தெரியுமா?? இன்னைக்கு வைஷ்ணவிய கடத்த சொல்லி இருக்கா" என்று சொன்னதும் அனிதாவிற்கும், தாயிற்கும் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.
"என் அனிதா பத்தி நல்லா தெரியும். இப்ப ஏன் சும்ம அவ மேல இப்படி ஒரு பலிய போட்ரன்னு தெரியல"
" அம்மா, உங்களுக்கு நா சொல்றது நம்பிக்க இல்லயா? ஏன் மா இவ்வளவு காலம் நம்பின உங்களுக்கு நான வைஷ்ணவிய லவ் பண்றன்னு தெரிந்ததும் நம்பிக்க எல்லாம் போய்ரிச்சே. சரி பரவல்ல, அனிதா நீயே உண்மைய சொன்ன உனக்கு நல்லது இல்ல " என்று அருண் தொடர,
" அருண், நீங்க என்ன சொல்றன்னு தெரியல. நா ஏன் வைஷ்ணவிய கடத்தனும்? அத்த, அருண் சும்ம சும்ம என் மேல பழிய போட்றாரு" என்று முதலைக்கண்ணீர் வடித்தாள் அனிதா.

" கதிர், என் அம்மாக்கு எல்லா உண்மையையும் சொல்லுங்க" என்று அவனைப் பார்க்க,
அனிதாவை ஒரு முறை பார்த்துவிட்டு,
" ஆம் அத்த. உங்க மகன் சொல்றது உண்ம. உங்க சொத்துகள எடுத்து இந்த வீட்டுக்கு மருமகளா வரனும்டு தான் இவ்வளவு காலம் விட்டு உங்க வீட்டு உறவு சொல்லிக் கொண்டு வந்தாங்க.

ஆனா இங்க வந்தும் அருண எப்படிசரி கவிழ்க்க பார்த்தாங்க முடியல. அதற்கு இடையில வைஷ்ணவி அருண் உறவு தெரிய வரவே, இன்னும் அனிதா பொறாம கொண்டா. இவங்க ரெண்டு பேரும் உண்மையா லவ் பண்றாங்களான்னு என்ன வேவு பாக்க சொன்னா. அது மாதிரி நானும் இவங்க பின்னால ஓரிரு நாட்கள் சென்று information கொடுத்தேன். நேற்று அருண் birthday party ல அருணும் வைஷ்ணவியும் ரொம்ப நெருக்கமா இருந்தத பாத்துட்டு அனிதா ஏதாவது இதற்கு செய்ய வேண்டும்னு யோசிட்டே வந்தா.

நேத்து இரவு அனிதா அப்பா call செய்து வீட்டுக்கு வர சொல்லவும், இன்டைக்கு ஒரு நாள்ள ஏதாவது பண்ணனும்னு நினைச்சி, வேறு வழியில்லாத வைஷ்ணவிய கடத்த சொல்லி எனக்கு சொன்னா"
என்று கதிர் சொல்ல,
"என்ன ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா drama நடிக்கிறீங்களா? சபாஷ். அத்த இவங்கள நம்பாதீங்க. நா அப்படி பண்ணல " என்று சொன்னாள் அனிதா.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now