ஆதவனும் கண்களை கசக்கிக் கொண்டு கிழக்குத் திசையில் சங்கமிக்கவே,
பறவைகளும், விலங்குகளும் தத்தமது உணவுகளை தேட புறப்பட்டன.அலாரம் அடிக்கவே, வைஷ்ணவியும் எழுந்தாள் புதிய உற்சாகத்துடன்.
இன்று சற்று முன்பாகவே வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என்று குளியலறைக்குள் புகுந்தாள். குளியலையும் முடித்துக்கொண்டு சீருடையை அணிந்தபடி, கண்ணாடிக்கு முன்னால் நின்று சிகையை எவ்வாறு அலங்காரம் செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கையில்,
" வைஷூ" என்று தந்தை கூப்பிடவே,
" மகள், எனக்கு தலை சுற்றுகிறது போல் இருக்குதும்மா" என்று தந்தை சொல்லவே,
உடனே pressure யை machine இனால் செக் செய்யவே, சற்று கூடி இருப்பதை காண, தேவையான மருந்துகளை குடிக்க கொடுத்தாள்." என்னம்மா, இன்னும் சிவகாமியை காணவில்லை" என்று கூறவே,
சிவகாமி என்பவர் வைஷ்ணவி சிறு சிறு வீட்டு வேலைகளுக்கும், தன் தந்தைக்கு சரியான நேரத்தில் மருந்து மாத்திரை கொடுக்க வைத்திருக்கும் ஓர் பணிப்பெண்.வைஷ்ணவி தொலைபேசியால் தொடர்பு கொள்ளவே,
" மகள், ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன்" என்று சொன்னதும் கடிகார சிறிய முள் 8.15 யை தாண்டி சென்றபடி வைஷ்ணவியை பார்த்து ஏளனமாக சிரித்தது.மஹாவை தொடர்பு கொண்டு, ஏதும் emergency case வந்தால் உடனே தன்னை அழைக்கும்படியும் சொன்னாலும் இன்று டாக்டர் அருணிடம் நல்ல மதிப்பு வாங்க இருந்த சந்தர்ப்பமும் போய்விட்டது. எல்லாம் கடவுள் செயல் என்று மனம் சமாதானமானது.
தந்தையோ மகளே நீ போம்மா என்று எவ்வளவு வற்புறுத்தினாலும் அவளால் ஓர் அடி கூட நகரமுடியவில்லை. சிவகாமி வரும்வரை தந்தையுடன் இருப்பது நல்லதென்று மனதிற்கு பட்டது.
சிவகாமியும் வந்துவிடவே சில பணிகளை பணித்துவிட்டு தந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறி, தந்தையிடம் விடைபெற்று வைத்தியசாலையை அடைந்தாள்.
காரியாலயத்தில் கையொப்பமிட்டு எழவே, கைகளை கட்டியபடி கதவில் சாய்ந்த வண்ணம் இருக்கும் அவனை கண்கள் விழுங்கிக் கொண்டிருந்தன.
STAI LEGGENDO
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
Storie d'amoreதன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 க...