2 அதிரடி அறிமுகம்
கமலியின் அம்மா, செல்விக்கு ஃபோன் செய்து, கமலியை ஆதித்யாவிற்கு பெண் கேட்டாள் ரேணுகா. அதை நம்ப முடியாமல் திணறிப் போனார் செல்வி. தன் மகளுக்கு, இப்படிப்பட்ட ஒரு வரன் அமையும் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. தான் கனவு காண்கிறோமோ என்று சந்தேகம் கொண்டார் செல்வி.
"நாங்க ரொம்ப சாதாரணமானவாங்க..." என்று தயங்கினார்.
"பணம், காசு முக்கியம் இல்ல ஆன்ட்டி. கமலி மாதிரி ஒரு நல்ல பொண்ணு என் தம்பிக்கு மனைவியா வரணும்னு நாங்க விரும்புறோம். நீங்க சரின்னு சொன்னா, கல்யாண வேலையை ஆரம்பிச்சுடலாம்"
"எல்லாம் அந்த மகமாயியோட அருள்..." என்றார் செல்வி.
"அப்போ உங்களுக்கு சம்மதம்ன்னு எடுத்துக்கலாமா?"
"பரிபூரண சம்மதம், மா."
"தேங்க்யூ ஆன்ட்டி"
செல்வியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை... எப்பேர்பட்ட வரன்...!
ஆதித்யாவின் புகைப்படத்தை அவர்களுக்கு கொரியரில் அனுப்பி வைத்தாள் ரேணுகா. ஆதித்யாவை, கமலி பார்க்க வேண்டுமென்று விரும்பினாள் ரேணுகா. அந்த புகைப்படத்தை பெற்றபின் தான், கமலியின் குடும்பத்தாருக்கு முழு நம்பிக்கையே வந்தது. அவர்களுக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. கமலியின் குடும்பத்தார் சந்தோஷமாக இருந்தார்கள், ஒருத்தியை தவிர... அது மணப்பெண் கமலி தான். ஆதித்யாவின் புகைப்படத்தை பார்க்க மறுத்து, தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
"எனக்கு கல்யாணம் வேணாம். என்னை படிக்க வைங்க" என்று அழுதாள்.
"ஏண்டி பைத்தியக்காரி, நீ படிச்சு என்ன பண்ணப் போற? எப்படி இருந்தாலும் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும்...? அதை இப்பவே பண்ணிக்கோ" என்றார் அவளுடைய அத்தை சுந்தரி.
"அம்மா, இப்படி பண்ணாதிங்க. நான் உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்"
"தயவுசெய்து புரிஞ்சுக்கோ, கமலி. அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தா, உன்னை நிச்சயம் படிக்க வச்சிருப்பாரு. இப்படி ஒரு நல்ல சம்பந்தம் நமக்கு கிடைக்காது மா"
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.