20 ஆதித்யாவின் பார்வை
கமலியைப் பற்றி யோசித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான் ஆதித்யா. அவள் வீட்டிற்கு வருவதற்கு முன் அவன் வந்து சிசிடிவி ஃபுட்டேஜை பார்த்தது நல்லதாய் போனது. காரணம் என்னவென்று அறியாமல் அவளிடம் எதுவும் கேட்க அவன் விரும்பவில்லை. அதே நேரம், இதை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து விடவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.
அப்பொழுது, கமலி தங்கள் அறைக்குள் நுழைவதை பார்த்து மடிக்கணினியை மூடினான். ஆதித்யா வீட்டில் இருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டாள் கமலி. இனிமேல் அவன் தாமதமாய் வருவான் என்று அவள் நினைத்திருந்தாள் அல்லவா...! ஆதித்யாவை பார்த்தவுடன், லாவண்யாவும், சுமித்ராவும் காதலைப் பற்றி கொடுத்த விளக்கங்கள் அவள் நினைவுக்கு வந்தது.
"நீங்க வந்துட்டீங்களா ஆதிஜி? நான் தான் என்னுடைய படிப்பை நானே கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே..."
"ஆமாம், சொன்ன... அதே நேரம், என்னுடைய ஹெல்த்தையும் கவனிச்சிக்க சொல்லி நீ சொல்லலையா? 24 மணி நேரமும் வேலை செஞ்சுகிட்டு இருந்தா, நான் எப்படி என்னுடைய ஹெல்த்தை கவனிச்சிக்கிறது? உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்குற சாக்குல, தினமும் வீட்டுக்கு சீக்கிரமா வந்து கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு நெனச்சேன். நீ வேண்டாம்னு சொல்லிட்ட... சரி, பரவாயில்ல விடு..." என்றான் கவலையாக.
ஆதி கூறுவது சரி தான். அவன் தினமும் வீட்டிற்கு தாமதமாய் வந்து, தாமதமாய் உறங்கினால் அவனுடைய உடல் நிலை எப்படி நலமாய் இருக்க முடியும்? அவன் தினமும் சீக்கிரம் வருவது தானே அவனுக்கு நல்லது...!
"நீ என்னுடைய ஹெல்ப்பை கேட்டாலும், கேட்கலனாலும், நான் தினமும் சீக்கிரம் வரணும்னு முடிவு பண்ணி இருக்கேன்..."
"சாரி, ஆதிஜி. நீங்க யோசிக்கிற மாதிரி நான் யோசிக்கல. ஒருவேளை, உங்கள மாதிரி, என்னால எப்பவுமே யோசிக்க முடியாது போல இருக்கு..." என்றாள் கவலையாக.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.