36 வஞ்சக உலகம்...
அமைதியகத்தை விட்டு கிளம்பும் முன், பிரபாகரனுக்கு போன் செய்து விஷயத்தை கூறினான் ஆதித்யா. அவன் செய்ய வேண்டியது என்ன என்பதையும் கூறிவிட்டு காரை கிளப்பினான்.
ஆதித்யாவும், ராகுலும் அந்த லேப்பை சென்று சேரும் முன், அவர்களுக்காக அங்கு போலீசாருடன் காத்திருந்தான் பிரபாகரன். அந்த லேப்பை அவர்களுக்கு காட்டினான் ராகுல். போலீசாருடன் புயலென உள்ளே நுழைந்த ஆதித்யா, ஷட்டரை இறக்கி லேப்பை மூடினான்.
அந்த லேப்பின் முதலாளி, சில உயர்வகுப்பு மனிதர்களையும், போலீசாரையும் பார்த்து மிரண்டு போனான். அங்கு கட்டுக்கட்டாய் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை கையில் எடுத்தான் ராகுல். அவனிடமிருந்து பாதியை பெற்றுக்கொண்டான் ஆதித்யா. அந்த ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தை அவர்கள் தேடினார்கள்.
"இதோ இருக்கு பாரு, ஆதி" என்று கத்திய ராகுல், அந்தப் புகைப்படத்தை ஆதித்யாவிடம் காட்டினான்.
அடுத்த நொடி அந்த லேப் முதலாளியின் மொத்த உடலுமும் அதிரும் வண்ணம், அவனை ஓங்கி அறைந்தான் ஆதித்யா. அமைதியகத்திற்கு தபாலில் வந்த அந்த புகைப்படத்தை தன் கோட் பாக்கெட்டிலிருந்து வெளியில் எடுத்தான்.
"உன்னோட லைப்ல இந்த மாதிரி வேலையை தான் செய்யுறியா நீ? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என்னோட வைஃப் ஃபோட்டோவை இந்த மாதிரி மார்ஃபிங் பண்ணுவ?"
லேப் முதலாளி நடுங்கத் துவங்கினான். அவன் ஆதித்யாவிடம் இருந்து மேலும் ஒரு அறையை பெற்றான். அந்த அறை, முதலில் விழுந்த அறையை விட பலமாய் விழுந்தது
"அவங்க உங்க வைஃப்னு எனக்கு தெரியாது, சார்"
அவனது காலரை இறுகப் பற்றினான் ஆதித்யா.
"எதுக்குடா இப்படி செஞ்ச? உண்மையை சொல்லலைன்னா உன்னை உயிரோட புதைச்சிடுவேன்."
"அவங்க ஃபோட்டோவை என்கிட்ட கொடுத்து, ஒரு பொம்பள தான் சார் அதை செய்ய சொன்னாங்க"
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.