14 அதிர்ஷ்ட தேவதை
சமையலறையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் கமலி. கல்லூரிக்கு அவள் எடுத்துச் செல்ல வேண்டிய மதிய உணவை தயாரிக்க, முத்துவுக்கு உதவிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவசரமாய் உள்ளே நுழைந்தாள் ரேணுகா.
"முத்து, பாயசம் செய்ய சொல்லியிருந்தேனே, செஞ்சீங்களா? பூஜைக்கு வேணும்"
"செஞ்சாச்சி கா. முந்திரியை மட்டும் வறுத்து கொட்டணும்..."
ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றினாள் ரேணுகா. அங்கு ஏற்கனவே முத்து உடைத்து வைத்திருந்த முந்திரியையும் பாதாமையும் அதில் போட்டு வறுத்தாள். அதை பாயசத்தில் கொட்டிக் கலந்துவிட்டு, கமலியை பார்த்து,
"இன்னைக்கு ஆதி, ஒரு முக்கியமான ஃபாரின் காண்ட்ராக்டை முடிக்க போறான். அதனால தான் பாயாசம் வச்சி, அவனுக்காக நான் வேண்டிக்க போறேன்."
"ஓ..."
"கடவுளே, இன்னைக்கு ஆதி பாக்குற எல்லாம் அவனுக்கு அதிர்ஷ்டத்தை தரணும்..." என்றபடி பாயாச கிண்ணத்தை எடுத்து சென்றாள் ரேணுகா.
தன் கையைக் கூப்பி வேண்டினாள் கமலி.
"மகமாயி, அந்த காண்ட்ராக்ட் ஆதிஜிகே கிடைக்கணும். அக்கா சொன்ன மாதிரி, அவருக்கு அதிர்ஷ்டம் தராத எதையும் அவர் முன்னாடி கொண்டு போகாதீங்க..."
வேண்டிக் கொண்டதோடு மட்டும் நில்லாமல், தங்களது அறைக்கு செல்வதை தவிர்த்தாள் கமலி. ஒருவேளை, அவளது முகம் ஆதித்யாவுக்கு அதிர்ஷ்டத்தை தரவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி எல்லாம் ஏடாகூடமாக நினைத்தால் தானே அவள் கமலி? அவளுக்கு கல்லூரிக்கு நேரமாகி கொண்டிருந்ததால், அவளை அழைத்தான் ஆதித்யா.
"இப்ப நான் என்ன செய்யுறது, மகமாயி...?"
சட்டென்று அவளுக்கு ஒரு உபாயம் தோன்றியது... தனது துப்பட்டாவால் முக்காட்டிட்டு, முகத்தை மூடிக்கொண்டு வந்த அவளை பார்த்து, குழம்பிப் போனான் ஆதித்யா.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.