5 தொலைபேசி அழைப்பு

2.7K 106 10
                                    

5 தொலைபேசி அழைப்பு

கமலி, ஆட்டோவில் ஏறி செல்வதை பார்த்து, ஆதித்யாவும் பிரபாகரனும் திகைத்து நின்றார்கள். ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள்.

"அவ போய்ட்டா, டேமிட்..." என்று அலறினான் ஆதித்யா.

தன் சுய நினைவுக்குத் திரும்பிய பிரபாகரன்,

"அடக்கடவுளே..." என்று தன் காரை நோக்கி ஓடினான். எப்படியும் அவளைப் பிடித்தாக வேண்டும். ரேணுகாவோ, சுந்தரியோ கேட்டால் அவன் என்ன பதில் கூறுவான்? காரை, டாப் கியரில் கிளப்பினான். பத்து நிமிட துரத்தலுக்கு பின், கமலி சென்ற ஆட்டோவை மடக்கி பிடித்தான். காரை விட்டு கீழே இறங்கி சென்று, அவளை தன்னுடன் வருமாறு வேண்டினான். காரில் ஆதித்யா இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவனுடன் செல்ல சம்மதித்தாள் கமலி.

"என்ன கமலி இது? நீங்க தனியா உங்க வீட்டுக்கு போனா, உங்க அத்தை எங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க?" என்றான் வருத்தத்துடன்.

"நான் அவர் கூட போக மாட்டேன்" என்றாள் தலையை குனிந்தபடி.

"ஏன் மா?"

"அவர் என் கையை பிடிச்சி இழுத்தார் தெரியுமா?"

"நெஜமாவா? எப்போ?" என்றான் உண்மையிலேயே அவன் அதிர்ச்சியடைந்துவிட்டது போல்.

ஆமாம் என்று தலையை அசைத்தபடி,

"நேத்து, கோவிக்கு வந்தார்ல, அப்போ..."

"என்னது...??? ஆதித்யா கோவிலுக்கு வந்தானா?"

ஆமாம் என்று தலையாசைத்தாள்.

"அப்படியா? எனக்கு தெரியாதே... நெஜமாவே அவன் கோவிலுக்கு வந்தனா?"

அவள் மறுபடியும் ஆமாம் என்று தலையசைத்தாள்.

"என்னால இதை நம்பவே முடியல. ஏன்னா, அவன் இதெல்லாம் முன்னாடி எப்பவும் செஞ்சதே இல்ல"

அமைதியாக இருந்தாள் கமலி.

"அவன் ஏன் எல்லாத்தையும் புதுசு புதுசா செய்றான்னு எனக்கு புரியவே இல்ல... "

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now