3 ரகசிய திட்டம்
அவள் வீட்டு வரவேற்பறையின் மூலையில் அமர்ந்து தேம்பி கொண்டிருந்தாள் கமலி. அங்கு மும்முனை தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவள், ஆதித்யாவிடம் நடந்துகொண்ட அசட்டுத்தனத்திற்காக, அவளுடைய அம்மா செல்வி, அத்தை சுந்தரி, தோழி ஜானகி அனைவரும் அவளை வசைபாடிக் கொண்டிருந்தார்கள்.
"நீ செஞ்ச மாதிரி, ஒரு மடத்தனத்தை யாரும் செஞ்சிருக்க மாட்டாங்க. இன்னும் நாலு நாள்ல நீ அவருக்கு பொண்டாட்டியாக போற... ஆனா, நீ என்னடான்னா, அவரு என்னமோ ஒரு ரவுடிங்குற மாதிரி கலாட்டா பண்ணிட்ட." என்றார் செல்வி.
"இப்படியெல்லாம் கூட யாராவது செய்வாங்களா? பாவம் அந்த பிள்ளை உன்னைப் பத்தி என்ன நெனைச்சாரோ..." என்றார் சுந்தரி.
ஜானகி பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். *உங்க குழந்தை ஃபிரண்டு, கல்யாணத்துக்கப்புறம் தொட்டில்ல தான் தூங்குவேன்னு சொல்லாம இருந்தா சரி* என்று ஆதித்யா கூறியது அவள் நினைவுக்கு வந்தது. அவளைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருப்பது அப்படித் தானே...!
"அவர் எப்படி என்னைத் தொடலாம்? அவர் என் கையை பிடிச்சாரு தெரியுமா?" என்றாள் தேம்பியபடி கமலி.
"தொட்டா என்னடி? பைத்தியக்காரி... அவர் உனக்கு புருஷனாக போறவரு" என்றார் சுந்தரி.
"அதனால என்ன? எனக்கு அவர் யாருன்னு கூட தெரியாது... அவர் என்னைத் தொடும் போது நான் சும்மா இருக்கணும்னு சொல்றீங்களா?"
"கல்யாணத்துக்கு அப்புறம், உன்னை தொட அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதை ஞாபகத்துல வச்சிக்கோ"
"அதுக்காகத் தான் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றேன்" என்று மேலும் தேம்பினாள்.
"வாயை மூடுடி... நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவங்க எவ்வளவு பெரிய ஆளுங்கன்னு தெரியுமா உனக்கு? நீ எந்த ஜென்மத்தில் செஞ்ச புண்ணியமோ, நீ அவங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு அவங்க ஆசைப்படுறாங்க"
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.