39 ஆதித்யாவின் நம்பிக்கை

2.5K 103 14
                                    

39 ஆதித்யாவின் நம்பிக்கை

காதல் ரசம் சொட்ட தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யாவை நோக்கி திரும்பினாள் கமலி.

"வாங்க ஆதிஜி, சுமித்ரா வீட்டுக்கு போகலாம்"

"அணில்குட்டி பாண்ட் 007..." என்று அவன் கூறியதை கேட்டு உதடு சுழித்தாள் கமலி.

"போங்க ஆதிஜி..." என்று சிணுங்கினாள்.

"இப்போ உன் முகத்தை பாத்தா அப்படியே அணில் மாதிரி தான் இருக்கு" என ஆதித்யா கூற, புன்னகை புரிந்தாள் கமலி.

"நான் நினைச்சிகிட்டிருந்தேன், என்னோட அணில்குட்டி எப்பவும் பொந்துல தான் அமைதியா இருக்குன்னு. ஆனா, அது யாருக்கும் தெரியாம வெளியில போயி துப்பறிஞ்சிட்டு வந்திருக்கு..."

"ஐ அம் சாரி, ஆதிஜி..."

"ஷ்ஷ்... நீ இந்த குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய உபகாரம் பண்ணியிருக்கேன்னு உனக்கு தெரியாது. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்று அவள் நெற்றியுடன் தன் நெற்றியை செல்லமாய் முட்டினான். வெட்கம் தாங்காமல் அங்கிருந்து ஓடிப்போனாள் கமலி.

.........

கமலியின் குடும்பத்தினரை தன் வீட்டில் பார்த்த சுமித்ராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. புன்னகையுடன் அவர்களை வரவேற்றாள். அவளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வண்ணம், அவளை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதார் இந்திராணி. ஒன்றும் புரியாமல், கமலியை பார்த்து, *என்ன விஷயம்?* என்று ஜாடையில் கேட்டாள் சுமித்ரா. இந்திராணியின் அழுகையை பார்த்து ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்டிருந்த கமலி, மெல்ல புன்னகைத்தாள்.

அதே நேரம், அங்கு சுமித்ராவின் அம்மாவும், அப்பாவும், சமீர்கானுடன் வந்து சேர்ந்தார்கள். அவர்களது வருகை, சுமித்ரா எதிர்பாராத ஒன்று என்பதால் ஓடிச் சென்று அவள் அம்மாவின் கையை பற்றிக்கொண்டாள்.

"என்னம்மா, சொல்லாம, கொள்ளாம திடீர்னு வந்திருக்கீங்க?"

சுமித்ராவின் அம்மா, அம்பிகா அமைதி காத்தார். அவரிடம் வந்த கமலி,

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now