30 அலுவலகத்தில் கமலி
ஆதித்யாவுடன் அலுவலகம் செல்ல தயாரானாள் கமலி. வழக்கம் போல ஆதித்யாவின் நெற்றியில் குங்குமம் வைத்து விட வந்தாள் ரேணுகா. அவளைத் தடுத்து நிறுத்திய ஆதித்யா,
"கமலிக்கு வச்சு விடுங்க கா" என்றான்.
அவன் கமலியை கைகாட்டி அழைக்க, ஓடி வந்து அவன் அருகில் நின்றாள். அவளுக்கு குங்குமம் வைத்து விட்டாள் ரேணுகா. அப்போது அங்கு, தயிரும், சர்க்கரையும் கலந்த கலவையுடன் வந்தார் பாட்டி.
"இதை சாப்பிடு கமலி, எல்லாத்துலயும் உனக்கு வெற்றி கிடைக்கும்" கமலியை நோக்கி ஒரு தேக்கரண்டி நிறைய தயிரும் சர்க்கரையும் கலந்த கலவையை நீட்டினார்.
அதை சாப்பிட்ட கமலி, பாட்டியின் கையில் இருந்து அந்த கிண்ணத்தை வாங்கி, ஒரு தேக்கரண்டி தயிர் சர்க்கரை கலவையை ஆதித்யாவை நோக்கி நீட்டினாள். அவளை ஆதித்யா ஆச்சரியமாய் பார்க்க,
"உங்களுக்கும் எல்லாத்துலயும் வெற்றி கிடைக்கட்டும் ஆதிஜி" என்றாள்.
"ஆதிக்கு தயிர், சர்க்கரை பிடிக்காது. அவன் எப்பவும் அதை சாப்பிடவே மாட்டான்" என்றாள் ரேணுகா.
கமலியின் முகத்தில் இருந்த சந்தோஷம் வடிந்து போனது. அவள் தன் கையை கீழேயிறக்கும் முன், அவள் கையைப் பற்றி அந்த தயிர் கலவையை உண்டான் ஆதித்யா. அது மீண்டும் கமலியின் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்தது.
"கிளம்பலாம்" என்றான்.
அனைவரையும் நோக்கி கையசைத்துவிட்டு அவனுடன் கிளம்பிச் சென்றாள் கமலி.
இண்ட்காம் அலுவலகம்
ஆதித்யாவுடன் அலுவலகத்தில் நுழைந்த கமலி, அன்று தன்னை தடுத்து நிறுத்திய வரவேற்பாளர் பெண்ணை நோக்கி ஒரு பார்வையை வீச தவறவில்லை. தன் தலையை உயர்த்தி மிடுக்காய் நடந்த கமலியை பார்த்து, அந்த வரவேற்பாளர் பெண்,
"குட்மார்னிங் மேடம்" என்றாள்.
தன் தலையை அசைத்தபடி பெருமையுடன் ஆதித்யாவுடன் நடந்தாள் கமலி.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.