42 நேர்மை

2.9K 110 15
                                    

42 நேர்மை

இன்ட்காம்

தான் கொண்டுவந்த கோப்பில், புன்னகைத்தபடியே ஆதித்யா கையப்பம் இடுவதை பார்த்தான் பிரபாகரன். கையொப்பமிட்டு முடித்துவிட்டு எழுந்தான் ஆதித்யா. அவன் அலுவலகத்தை விட்டு செல்ல தயாராவதை பார்த்து முகம் சுளித்தான் பிரபாகரன்.

"எங்க கிளம்புற, ஆதி?"

"வீட்டுக்கு"

"வீட்டுக்கா? மணி 12 தான் ஆகுது"

"அதனால என்ன?"

"என்ன விஷயம் ஆதி, இன்னைக்கு உன் முகம், வழக்கத்தை விட அதிகமா ஜொலிக்குது?"

"ஒன்னுமில்ல" என்றான் முகத்தை திடமாய் வைத்துக்கொண்டு.

"அப்புறம் எதுக்கு இவ்வளவு அவசரமா வீட்டுக்குபோற? ஓ... கமலி வீட்ல இருக்காங்களா...?"

"ஆமாம். என் வைஃப் வீட்ல இருக்கா. அதனால சீக்கிரம் போறேன் "

"என்ன ஒரு மாற்றம்... நீ இப்படி வேலையெல்லாம் விட்டுட்டு, உன் பொண்டாட்டிய தேடி ஓடுவேன்னு நான் கனவுல் கூட நினைச்சதில்லை."

"கமலி எல்லாத்துக்கும் தகுதியானவ"

"உண்மை தான். அவங்க உன்னை சீக்கிரம் ஏத்துக்கணும்..."

அதை கேட்டவுடன் ஆதித்யாவின் முகம் மலர்ந்ததை கவனித்தான் பிரபாகரன்.

"உன் முக மலர்ச்சிக்கு என்ன அர்த்தம்?"

தன் கண்களை சுழற்றினான் ஆதித்யா.

"என்ன மச்சான் விஷயம்...?"

"வாயை மூடு" என்றான் சிரிப்பை அடக்கியபடி.

"கடவுளே... நீ வெட்கமெல்லாம் படுறியே டா..."

ஒன்றும் கூறாமல் கதவை நோக்கி நடந்தான் ஆதித்யா.

"எனக்கு பதில் சொல்லாம போகாதே"

"என்ன சொல்லணும் உனக்கு?"

"நடந்தது என்ன...? நீ எதிர்பாராதது நடந்திடுச்சா?"

"உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா...? கல்சர்லெஸ் இடியட்..."

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt