6 திருமதி ஆதித்யா
மாலை
ஆதித்யா என்ன கூற போகிறானோ என்பதை பற்றி சிந்தித்து, பதட்டத்துடன் இருந்தார்கள் செல்வியும் சுந்தரியும். அன்று மாலை ஆதித்யா வரப்போகிறான் என்ற விஷயத்தை அவர்கள் கமலியிடம் கூறவில்லை. அதனால் அவள் சகஜமாக இருந்தாள். இல்லாவிட்டால், அவளும் பதறி, அவர்கள் பதற்றத்தை மேலும் கூட்டியிருப்பாள்.
அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. கமலியின் முகம் பிரகாசமானது. வந்திருப்பது அவளுடைய தோழி ஜானகி என்று நினைத்தாள் கமலி. கதவை திறக்க துள்ளிக் குதித்து ஓடினாள்.
புன்னகையுடன் கதவை திறந்தவள் திடுக்கிட்டுப் போனாள். அவளுக்கு வரப்போகும் கணவன் அங்கு நின்றிருந்தான். அவளைப் பார்த்தவுடன், தான் அணிந்திருந்த ரேபான் கண்ணாடியை அனாயாசமாய் கழட்டினான். அவனுக்கும் கூட அது எதிர்பாராதது தான். இருந்தாலும் புன்னகைத்தான்.
"ஹாய்" என்றான்.
மெல்ல பின்னோக்கி நடக்க துவங்கிய கமலி, பின்னால் வந்த சுந்தரியின் மீது மோதி நின்றாள். அவள் அங்கிருந்து ஓடி செல்லும் முன் அவள் கையை பற்றிக்கொண்டு ஆதித்யாவை பார்த்து புன்னகைத்தார் சுந்தரி.
"வணக்கம்" என்றான் ஆதித்யா.
"வணக்கம் தம்பி. உள்ள வாங்க"
அவனுக்கு தன் முகத்தை காட்டாமல், சுந்தரியின் தோளில் முகம் புதைத்து நின்ற கமலியை பார்த்தபடி உள்ளே நுழைந்தான் ஆதித்யா. தன் தோளை குலுக்கி, அவளை பார்த்து முறைத்தார் சுந்தரி. சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு தலை குனிந்து நின்றாள் கமலி. அதை கண்டு மகிழ்ந்தான் ஆதித்யா என கூற தேவையில்லை.
"போய் அவருக்கு காபி போட்டு கொண்டு வா" என்றார் சுந்தரி.
இது தான் சாக்கு என்று, விட்டால் போதும் என ஓடிப் போனாள் அந்தப் பெண். அப்பொழுது அங்கு வந்த செல்வியும் அவனை வரவேற்றார்.
"தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி. கிராமத்துல வளர்ந்த பொண்ணு. அதனால தான் இப்படி இருக்கா. சீக்கிரமே எல்லாத்தையும் கத்துக்குவா" என்றார் சுந்தரி தயங்கியபடி.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.