13 நீங்கள் நல்லவர் தான்
தனது தோழி சுமித்ராவை கமலிக்கு அறிமுகம் செய்ய நினைத்தாள் லாவண்யா. அதனால் சுமித்ராவின் வருகைக்காக அவள் காத்திருந்தாள்.
"நம்ம க்ளாஸுக்கு போகலாம். டைம் ஆகுது" என்றாள் கமலி.
"இரு நான் உனக்கு ஒரு இன்ட்ரஸ்டிங்கான ஆளை இன்ட்ரொடியூஸ் பண்றேன்"
"யார் அது?"
"என்னோட ஃப்ரெண்ட் சுமித்ரா"
"அவங்களும் இங்க தான் சேர்ந்திருக்காங்களா?"
"ஆமாம். அவளுக்கு ஸ்காலர்ஷிப்ல சீட் கிடைச்சிருக்கு"
அப்போது அவர்கள்,
"அண்.....ணி..." என்ற குரல் கேட்டு திரும்பினார்கள்.
அது ராகுலுடைய குரல் என்று புரிந்துகொள்ள கமலிக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. மாணவர்கள் அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள் கமலியை. திருமதி ஆதித்யா இவ்வளவு எளிமையாக இருந்தால், அவர்களுக்கு ஏன் ஆச்சரியமாய் இருக்காது? அவர்களுடைய சீனியர் மாணவன் என்ற முறையில், ராகுல், மாணவர்களுக்கு *இவர் என்னுடைய அண்ணி அவரிடம் ஜாக்கிரதையாய் பழகுங்கள்* என்று மறைமுக எச்சரிக்கை விடுக்கிறான் என்பது புரிந்தது லாவன்யாவிற்கு. அவள் நினைத்தது சரி தான். *கமலியை பார்த்துக் கொள்* என்று ஆதித்யா கூறியிருக்கும் போது, சும்மா இருந்து விடுவானா ராகுல்? தன் நண்பர் கூட்டத்துடன் அவளருகில் வந்தான் ராகுல்.
"ஹாய் அண்ணி... வெல்கம் டு அவர் காலேஜ்" என்றான்.
"தேங்க் யூ"
"கைஸ், இவங்க மிஸஸ் ஆதித்யா. என்னோட அண்ணி" என்றான் ராகுல்.
"வணக்கம் அண்ணி" என்றார்கள் அவனுடன் இருந்த மாணவர்கள் பவ்யாமாக.
அவர்கள் கமலிக்கு தந்த மரியாதையைப் பார்த்து திகைத்துப் போனாள் லாவண்யா.
"வணக்கம்" என்று புன்னகையுடன் கூறினாள் கமலி.
"உங்களுக்கு நான் இருக்கேன். ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க" என்றான் ராகுல்.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.