33 குமரிப்பெண்
கமலி கமலியாகவே இல்லை. ஆதித்யாவிடமிருந்து உண்மையை மறைத்துவிட்டு எப்படி அவளால் இயல்பாய் இருக்க முடியும்? சரவணன், ஆதித்யாவுக்கு தெரியாமல் தவறு செய்கிறான் என்பதில் ஆளுக்கு சந்தேகமில்லை. எல்லாவற்றையும் ஆதித்யாவிடம் கொட்டித் தீர்த்துவிடலாம் தான். ஆனால், அதன் பிறகு ஏற்படும் விளைவுகளை எண்ணி அவள் பயந்தாள்.
இந்த மிகப் பெரிய சுமையை மனதில் சுமக்க அவள் தயாராக இல்லை. அதனால், வழக்கம் போல் மகமாயி கூறுவதை கேட்பது என்று முடிவு செய்தாள். *சொல், சொல்லாதே* என்று இரண்டு சீட்டுகளை எழுதி, அதை மாரியம்மனின் புகைப்படத்தின் எதிரில் போட்டு, அதில் ஒன்றை அவசரமாய் எடுத்து பார்த்தவளுக்கு *சொல்லாதே* என்று இருந்ததை பார்த்து ஐயோ என்றானது.
"ஏன் மா உண்மையை சொல்ல விடாம என்னை தடுத்துட்டீங்க? ஏன் நான் ஆதிஜிகிட்ட உண்மையை மறைக்கணும்னு சொல்லிட்டீங்க? என்னை எல்லாத்தையும் சொல்ல சொல்லுவீங்கன்னு நினைச்சேனே..."
சில நொடிகள் தாமதித்தவள்,
"சரி, நீங்க சொன்னீங்கன்னா, அதுக்கு ஏதாவது ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். நீங்க சொல்லி தான் நான் இந்த உண்மையை ஆதிஜிகிட்டயிருந்து மறைக்கிறேன்னாலும், இந்த பாவத்தை செய்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்க. இதனால எனக்கும் ஆதிஜிக்கும் நடுவில எந்த மனசு கஷ்டமும் வரக்கூடாது. எப்பவும் போலவே, இந்த விஷயத்துலயும் நீங்க என் கூட இருப்பீங்கன்னு நான் நம்புறேன்"
ஆதித்யாவிடம் உண்மையை கூற முடியவில்லையே என்ற வருத்தத்துடன், சோகமாய் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள் கமலி. அப்போது அங்கு வந்த ராகுல், அவள் முன் விரல்களை சொடுகினான். கமலி திடுக்கிட்டு தன் தலையைப் பின்னால் இழுத்தாள்.
"என்ன அண்ணி, நான் வந்தது கூட தெரியாம என்ன யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?"
"நீங்க என்கிட்ட பேசாதீங்க ராகுல்" என்றாள் பொய் கோபத்துடன்.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.