44 என்ன நடக்கிறது?
யாருடனோ ஃபோனில் எரிச்சலுடன் பேசிக்கொண்டு இருந்தான் சரவணன்.
"இதெல்லாம் சரியா வரும்னு எனக்கு தோனல"
"......"
"இல்ல... நீ அவளை குறைச்சி எடை போடுற. அவ, நம்ம நினைச்சது மாதிரி இல்ல. ஆதித்யா முழுக்க முழுக்க அவளோட கண்ட்ரோல்ல இருக்கான். அவ அவனை அடிமையாக்கி வச்சிருக்கா. இது நமக்கு நல்லதில்ல. நான் சொல்றதை கேளு. எல்லாத்தையும் என்கிட்ட விடு. அவளை நான் பார்த்துக்கிறேன். அவளை எப்படி ஆதித்யாவோட வாழ்க்கையில இருந்து வெளியேத்தணும்னு எனக்கு தெரியும்"
"......."
"இல்ல, நான் அவசர பட மாட்டேன். ஒவ்வொரு அடியும் கவனமாத் தான் எடுத்து வைப்பேன்."
"...."
"சரி..."
அழைப்பைத் துண்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான் சரவணன்.
அமைதியகம்
அனைவரும் வரவேற்பரையில் அமர்ந்து, கே.பாலச்சந்தர் இயக்கிய ஹிந்தி படமான *ஏக் துஜே கேலியே* வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஆதித்யா, அவர்கள் அனைவரும் ஒரேடியாய் சினிமாவில் மூழ்கிவிட்டிருந்ததை கண்டான். அந்தப் படம் கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருந்தது. நகத்தை கடித்தபடி கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.
"கமலி, என்கூட வா" என்றான் ஆதித்யா.
"ஆதிஜி, ப்ளீஸ் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க" என்றாள் தொலைக்காட்சி பெட்டியில் இருந்து தன் கண்களை அகற்றாமல்.
"வந்து எனக்கு வருண் அண்ட் கோ ஃபைலை எடுத்து குடுத்துட்டு போ. ரொம்ப அர்ஜென்ட்" என்றான்.
அவனைப் பார்த்து முகம் சுளித்தாள் கமலி. ஏனென்றால், அவனுடைய எந்த கோப்பையும் அவள் கையாள்வது இல்லை. அவளுக்காக காத்திராமல் அவர்களது அறையை நோக்கி சென்றான் ஆதித்யா. அவன் கேட்ட கோப்பை சீக்கிரம் எடுத்துக் கொடுத்து விட்டு மீண்டும் வந்து விடலாம் என்று அவன் பின்னால் ஓடினாள் கமலி.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.