43 விஷநாகத்தின் குறி
இரண்டு நாட்களுக்கு பிறகு,
அமைதியாக அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்த மயூரியிடம் வந்தாள் கமலி. ஆனால், அவள் வந்ததை கூட கவனிக்கவில்லை மயூரி. அவளது தோளை பிடித்து உலுக்கினாள் கமலி.
"ஆங்...? என்ன கமலி?"
"என்ன மேடம், உங்க வீட்டுக்காரரை பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களா?" என்றாள் கிண்டலாக கமலி.
ஆமாம் என்று மெல்ல தலையசைத்தாள் மயூரி.
"அவர் அமைதியகத்தை விட்டு போக விரும்புறார்"
"என்னது...?" என்றாள் அதிர்ச்சியாக கமலி.
"இங்க அவருக்கு கம்ஃபர்டபிளா இல்லையாம். நம்ம அவரை தப்பா நினைக்க கூடாது கமலி. ஆதித்யா அண்ணன் அவருடைய பாஸ். திடீர்னு அவரு, சுரேஷுக்கு மச்சான் ஆயிட்டாரு. அவரோட ஸ்டேட்டஸ் நாங்க அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயரத்துல இருக்கு... அவரு இங்க இருக்க ரொம்ப சங்கட படுறாரு..."
"ஆனா, இந்த குடும்பத்துல இருக்கிறவங்கள பத்தி நீ நெனச்சு பாத்தியா? அட்லீஸ்ட் அத்தையை பத்தியாவது நெனச்சு பாத்தியா? நீ இங்கயிருந்து போனா, அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்கன்னு உனக்கு புரியலையா?"
"எனக்கு புரியுது, கமலி. ஆனா..."
"இதைப் பத்தி நீ என்ன நினைக்கிற?"
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, கமலி"
"மயூ, இது உன்னோட வீடு... உன்னோட குடும்பம். இங்க இருக்கிறவங்க உன்னுடைய ஆட்கள். நீ தான் அண்ணனுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கணும்."
அமைதியாய் இருந்தாள் மயூரி.
"உனக்கு இங்க இருக்க பிடிக்கலையா, மயூ?"
"சேச்சே... இங்க இருக்கிறவங்க என் மேல எவ்வளவு அக்கறையும் அன்பையும் காட்டும் போது, எனக்கு எப்படி இங்க இருக்க பிடிக்காம போகும்? நேத்து, அம்மா ( வளர்த்த அம்மா) இங்க வந்திருந்தப்போ எவ்வளவு சந்தோஷப் பட்டாங்க தெரியுமா? இவங்க ரொம்ப நல்லவங்க கமலி..."
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.