49 ஆதித்யா...

2.4K 106 21
                                    

49 ஆதித்யா...

காரில்...

சென்னையின் புறவழிச் சாலையில் சீறிப்பாய்ந்தது ஆதித்யாவின் கார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆதித்யா. அது கமலியை முள்ளாய் தைத்தது. கோபத்தால் முறுக்கேறிய நரம்புகளுடன் கூடிய ஆதித்யாவை பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது.

"ஆ... தி... ஜி..." என்றாள் கமலி மெல்ல.

அவ்வளவு தான்... கோபத்துடன் ஆதித்யா பிரேக்கை அழுத்த, *கிரீச்* என்ற ஓசையுடன் சாலையில் தேய்த்துக் கொண்டு நின்றது கார். காரைவிட்டு கீழே இறங்கிய ஆதித்யா, கமலியையும் காரை விட்டு வெளியே இழுத்தான்.

"என்ன நாடகம் கமலி இது? என்ன நாடகம்? உன்னோட புருஷனை உதவாக்கரைன்னு நினைச்சியா? ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு எப்படி நீ என்கிட்ட பொய் சொல்லுவ? ஏன் கமலி? உன்னைப் பாக்கனும்னு எவ்வளவு ஆசையா நான் ஓடி வந்தேன் தெரியுமா? என்கிட்ட வரணும்னு உனக்கு தோணவே இல்லையா? என்கிட்டயிருந்து விலகியிருக்கிறது உனக்கு சம்மதமா கமலி? நான் இல்லாம இருப்பியா நீ?"

ஆள் அரவமற்ற அந்த சாலையில் அவனது குரல், நாலாபுறமும் எதிரொலித்தது.

அவனுடைய எந்த கேள்விக்கும் பதில் கூறாமல், குனிந்தபடி அழுது கொண்டு நின்றாள் கமலி. அது ஆதித்யாவை மேலும் குழப்பியது.

"நீ என்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்னு நான் நம்பிக்கிட்டு இருந்தேன். ஆனா, நான் நெனச்சது தப்பு... "

"இல்ல ஆதிஜி... நீங்க நினைச்சது தப்பு இல்ல... நீங்க எப்பவும் தப்பா இருக்கவே முடியாது... உங்களை சுத்தி இருக்கறவங்க தான் தப்பானவங்க" வேறு வழியில்லாமல் உண்மையை கூறினாள் கமலி.

அதைக் கேட்டு முகத்தை சுருக்கினான் ஆதித்யா.

"என்ன்ன்ன...???? நீ யாரைப் பத்தி பேசுற? என்னுடைய கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதிலை ஏன் சொல்ற?"

"சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் தான் நான் பேசுறேன் ஆதிஜி. உங்களை ஏமாத்துறதுக்காக நான் எங்க அம்மா வீட்டுக்கு போகல... என்னை போகச் சொல்லி மிரட்டி அனுப்பி வச்சாங்க"

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang