55 விதி வலியது
ஆதித்யா நினைத்தது போலவே, கமலி எல்லா நேரமும் பிகினியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதற்காக அவள் ஆதித்யாவை பற்றி நினைக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆதித்யா கவலையாய் இருக்கிறான் என்று அவளுக்கு நிச்சயம் தெரியும். பிரபாகரன் கூறியது போல், ஆதித்யாவை நன்றாக படிக்கத் தெரிந்து கொண்டு விட்டாள் கமலி. ஆனால் அவனை மனம் திறந்து எப்படி பேச வைப்பது என்று தான் அவளுக்கு புரியவில்லை. ஜிம்மியுடன் விளையாடியபடி இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி. ஜிம்மியை துரத்திக்கொண்டு ஓடிய கமலி, பாட்டியின் அறையை கடந்த போது, அவர் ஒரு பழைய புகைப்பட ஆல்பத்தை பார்த்து அழுது கொண்டிருந்ததை கண்டாள். அவள் அறையின் உள்ளே நுழைவதை பார்த்த பாட்டி, கண்ணை துடைத்துக் கொண்டு செயற்கையாய் புன்னகைத்தார்.
"ஏன் பாட்டி நீங்க அழறீங்க?" என்றாள் கவலையாக.
ஒன்றுமில்லை என்று பாட்டி தலை அசைத்தாலும் அவர் கண்கள் கண்ணீர் சிந்துவதை நிறுத்தவில்லை. அவர் கையிலிருந்த ஆல்பத்தை வாங்கி பார்த்தாள் கமலி. அது ஆதித்யா மற்றும் ரேணுகாவின் சிறுவயது புகைப்படங்கள் நிரம்பிய ஆல்பம். அதில் இருந்த புகைப்படங்களை பார்த்து புன்னகை புரிந்தாள் கமலி.
"உனக்கு தெரியுமா கமலி, ரேணுகா ரொம்ப நல்ல பொண்ணு. அவ எப்படி இந்த அளவுக்கு மாறி போனான்னு என்னால நம்பவே முடியல. ஆதின்னா அவளுக்கு உயிர். எல்லாரையும் விடவும் அவனைத் தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவனை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததே இல்ல. பணம், எப்படி எல்லாம் மனுசங்கள மாத்திடுது" என்று வருத்தப்பட்டார்.
"தயவுசெய்து வருத்தப்படாதீங்க பாட்டி"
கண்களை துடைத்துக் கொண்டு தன்னை சுதாகரித்துக் கொண்டார் பாட்டி.
"நான் இந்த ஆல்பத்தை எடுத்துக்கிட்டு போகட்டுமா பாட்டி?" என்றாள் கமலி.
"தாராளமா கொண்டு போ"
அந்த ஆல்பத்தை அங்கிருந்து தன் அறைக்கு கொண்டு வந்தாள் கமலி, ஏனென்றால், பாட்டி மீண்டும் அதை பார்த்து அழக் கூடும் என்று எண்ணி. கட்டிலின் மீது அமர்ந்து ஆதித்யாவின் புகைப்படங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்த அவளுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. அவள் இதழில் குறும்புப் புன்னகை மலர்ந்தது.
KAMU SEDANG MEMBACA
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romansaஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.