45 யார் அது?
ஆள் அரவமற்ற கிழக்கு கடற்கரை சாலையில் இலக்கில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள் கமலி. திடீரென்று, யாரோ அவளை இரு சக்கர வாகனத்தில் துரத்துவதை அவள் உணர்ந்தாள். அடுத்த சில நொடிகளில், அந்த இருசக்கரவாகனம், அவளை நெருங்கி வந்தது. தலைக்கவசம் அணிந்து, அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவன், அவள் அருகில் வண்டியை நிறுத்தி, அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்துக் கொண்டு வண்டியை கிளப்பினான். அவன் பிடியிலிருந்து வெளிவர போராடிய கமலி, தன் போராட்டத்தை நிறுத்தினாள், அந்த மனிதனின் மீது வீசிய வாசம், அவளுக்கு பரிச்சயமானது என்பதால். அவனை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள்.
"ஆதிஜி..."
வண்டியை நிறுத்திவிட்டு, தன் தலைக்கவசத்தை கழட்டினான் ஆதித்யா. கமலியின் உடல் பயத்தில் நடுங்கியது.
"என்ன ஆச்சி கமலி? ஏன் அழற?"
தலையை உயர்த்தி அவனைப் பார்த்து, அவன் தோளில் பட்டென்று ஒரு அடி போட்டாள் கமலி.
"நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?"
"ஆனா ஏன்?"
"அந்த டிரைவர் என்கிட்ட எதுவுமே சொல்லல"
"அவனுக்கு எதுவும் தெரியாது. உன்கிட்ட எதுவும் சொல்லாம தான் உன்னை கூட்டிகிட்டு வர சொன்னேன்"
"எதுக்காக நீங்க என்கிட்ட எதுவுமே சொல்லல?"
"நான் உனக்கு போன் பண்ணப்போ, நீ என்னோட காலை அட்டென்ட் பண்ணவே இல்ல. உன் போன்ல நீ மிஸ்டு காலை பார்க்கலையா?"
"நான் உங்களுக்கு கால் பண்ணும் போது, உங்க ஃபோன் அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியாவில் இருந்தது"
அவள் கண்ணீரை துடைத்துவிட்டான் ஆதித்யா.
"ரொம்ப பயந்துட்டியா?"
அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.
"ஐ அம் சாரி... உன்னை மடியில வச்சு பைக் ஓட்டனும்ங்குற ஆசையை நிறைவேத்தலாம்னு நினைச்சேன்..."
ஒன்றும் கூறாமல் அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள் கமலி. சற்று தொலைவில் இருந்த பூங்காவிற்குள் வண்டியை செலுத்தினான் ஆதித்யா. கமலியை மடியில் வைத்தபடி பதினைந்து நிமிடங்கள் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.