7 உண்மை அன்புமறுநாள் காலை, அர்னவ் எழுந்தவுடன் செய்த முதல் வேலை, அவனது அம்மாவின் கைபேசியை தேடியது தான். வழக்கம் போலவே அது உணவு மேஜையின் மீது இருந்தது. அதை எடுத்து குஷியின் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் ஐ பார்த்துவிட்டு, புன்னகையுடன் அந்த கைபேசியை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு மீண்டும் தன் அறைக்குச் சென்றான்.
குஷியின் வருகை அந்த பகுதியில் இருந்த பெண்களுக்கிடையில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. ஏன் இருக்காது? சிங்கத்தின் குகைக்குள் தைரியமாய் நுழைந்த ஒரே பெண் அவள் தானே...! அவர்களது வினோத பார்வை குஷியை முதலில் குழப்பியது. அர்னவ்வின் பயமுறுத்தும் நடவடிக்கை அவளது குழப்பத்தை தீர்த்தது. அவள் தன்னை மிகச்சிறந்தவளாய் உணர்ந்தாள். அது மட்டுமல்லாது, அஸ்வினும் ஸ்ருதியும், அவளுக்கு அர்னவிடம் இருந்த நட்பை பற்றி முரசு அறிவித்து தெரிவித்தனர். அது அவர்களுக்குள் பொறாமையை கிளப்பியது. அஸ்வினும் சுருதியும் கூறியது உண்மையாக இருக்கும் என்று அவர்கள் நம்பவில்லை.
........
திட்டமிட்ட படியே, அவர்களுக்கு பிடித்த, தொடரை பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான் நந்து கிஷோர். குஷி தன் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அந்த பகுதி பெண்கள், அவரவர்கள் வீட்டின் வாசலில் நின்று, அவளை பார்த்து ஏதோ முணுமுணுப்பதை கவனித்தாள். அப்பொழுது அஸ்வினும் சுருதியும் அவர்களது நண்பர் பட்டாளத்துடன் அங்கு வந்தார்கள்.
"குஷி அக்கா, இவங்க எல்லாரும் எங்க ஃபிரண்ட்ஸ். இவங்களையும் நாங்கள் கூட்டிக்கிட்டு வரட்டுமா?" என்றாள் சுருதி.
தன் புருவம் உயர்த்திய குஷி, தனது கைபேசியை எடுத்து நந்துவுக்கு ஃபோன் செய்து,
"கொஞ்சம் வெளியில வாயேன்" என்றாள்.
வெளியே வந்த நந்து அங்கு அவள் பிள்ளைகளுடன் நின்றிருந்ததை பார்த்து ஓரளவுக்கு விஷயத்தை புரிந்து கொண்டான்.
YOU ARE READING
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...