37 இழந்த கட்டுப்பாடு

545 50 3
                                    

37 இழந்த கட்டுப்பாடு 

தன் வீட்டிற்கு வந்த கரிமாவை பார்த்து ரத்னாவின் முகம் பிரகாசம் அடைந்தது. ஆனால் குஷியோ சாதாரணமாய் அமர்ந்திருந்தாள். அவள் முதுகில் ஒரு அடி போட்ட கரிமா,

"பாரு, என்னை பார்த்து எப்படி ரியாக்ட் பண்றான்னு... இவளை நான் அர்னவ்க்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கவே கூடாது. ஒரு என்ஆர்ஐக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து, வேற ஏதாவது ஒரு ஃபாரின் கன்ட்ரிக்கு அனுப்பி வைச்சிருக்கணும்"

"மா எதுக்காக இப்படி ஓவரா ரியாக்ட் பண்றீங்க? பிராக்டிக்கலா இருங்க. நம்ம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்ல இருக்கோம்... டெய்லி பாக்குறோம்... என்னமோ ரொம்ப தூரத்துல இருந்து வர்ற மாதிரி ரியாக்ட் பண்றிங்க...? நீங்க என் அம்மா தானே? உங்களை நான் எதுக்கு ஒரு விருந்தாளி மாதிரி ட்ரீட் பண்ணனும்?"

"அவ சொல்றது சரிதானே?" என்று சிரித்தார் ரத்னா.

"ஆமாம். அதனால, உன்னோட திங்ஸை எல்லாம் பேக் பண்ணிக்கிட்டு என் கூட கிளம்பு"

"ஏன் வரணும்?" என்றாள் குஷி அதிர்ச்சியுடன்.

"ஏன்னா, நான் உன் அம்மா"

"ஆனா நான் உங்களுக்கு பொண்ணு மட்டும் இல்ல... என் புருஷனுக்கு வைஃப் அதை மறக்காதீங்க"

"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்று அர்னவ் கூற, அனைவரும் அதிர்ந்தார்கள்.

'ஏன் அரு?"

"அவளுக்கு எக்ஸாம் முடியற வரைக்கும் அவங்க அம்மா வீட்டுல இருந்தா நல்லதுன்னு எனக்கு தோணுது"

"அதுக்கு என்ன அவசியம்?" என்றாள் குஷி.

"நீ படிக்கிறதுக்கு அமைதியான சூழல் அவசியம். அதனால தான் அர்னவ் நீ நம்ம வீட்டுக்கு வரணும்னு நினைக்கிறான்" என்றார் கரிமா. 

அவனைப் பார்த்து முறைத்த குஷி,

"என்கிட்ட கேக்காம நீயா எப்படி முடிவெடுக்க முடியும்?" என்றாள்.

அதைக் கேட்டு சிரித்த கரிமா,

"இப்போ தானே நீ உன் புருஷனுக்கு பொண்டாட்டின்னு சொன்ன... அப்புறம் அவன் சொல்றத ஏன் கேட்க மாட்டேங்கிற?" என்றார்.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin