2 அவள் வருகிறாள்!

992 53 3
                                    


2 அவள் வருகிறாள்!

மறுநாள்

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அர்னவ் எப்பொழுதுமே நெடுஞ்சாலைகளை தவிர்த்து சிறிய சாலைகளில் செல்வதை வழக்கமாய் வைத்திருந்தான். பெசன்ட் நகரின் தெருக்கள் விசாலமாக இருக்கும் என்பதால், அவன் அப்படி செய்வதை வசதியாக உணர்ந்தான். அன்றும் அப்படித்தான். தன் இருசக்கர வாகனத்தை அவன் ஒரு திருப்பத்தில் திரும்பிய போது, யாரோ ஒருவன் வேண்டுமென்றே அவன் இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்து அவனை கீழே விழச் செய்தான். நல்ல வேலையாக அவன் வேகமாக செல்லவில்லை. அர்னவ் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு முன்பாக, அவனை எட்டி உதைத்த அதே மனிதன் அவனை அடிக்க கை ஓங்கினான். குங்ஃபூவில் பிரவுன் பெல்ட் வாங்கியவன் என்பதால், அந்த மனிதனின் சாமர்த்தியம் எதுவும் அர்னவிடம் எடுபடவில்லை. சில நிமிட சண்டைக்கு பிறகு, அந்த மனிதன் வாயில் ரத்தம் ஒழுக கீழே விழுந்து கிடந்தான். அவனை நோக்கி தன் கையை நீட்டினான் அர்னவ். வேறு வழியின்றி அவன் கரத்தை பற்றி எழுந்து நின்றான் அந்த மனிதன். அருகில் இருந்த ஒரு சிறிய மருத்துவ சாலைக்கு அவனை அழைத்துச் சென்றான் அர்னவ். அவனுக்கு ஊசி போட்டு சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார் மருத்துவர்.

"காலையில சாப்பிட்டியா?" என்றான் அர்னவ்.

அவன் இல்லை என்று தலையசைத்தான்.

"உன் பேர் என்ன?"

"சக்தி... சக்திவேல்..."

"சரி வா போகலாம்"

"என்னை போலீஸ்ல புடிச்சு கொடுக்க போறீயா பா?"

"அதைப்பத்தி நான் அப்புறமா யோசிக்கிறேன். முதல்ல வந்து சாப்பிட்டுட்டு, டாக்டர் கொடுத்த மாத்திரையை போடு" என்றான் அர்னவ்.

சக்திவேல் திகைத்து நின்றான். தன்னை தாக்க வந்த ஒருவனை, ஒருவனால் இந்த அளவிற்கு உபசரிக்கும் முடியும் என்பதை அவன் நம்பவில்லை. உணவு விடுதிக்கு சென்று சக்திக்காக சிற்றுண்டியை ஆர்டர் செய்தான் அர்னவ்.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)Where stories live. Discover now