13 கசப்பான கடந்த காலம்
நூலகத்திற்கு செல்லும் வழியில்...
"இந்த ஏரியாவுல வேற ஏதாவது இடம் இருக்கா?" என்றாள் குஷி.
"எப்படிப்பட்ட இடம்?"
"மீட்டிங் ஸ்பாட் மாதிரி..."
"எக்மோர்லயா?"
"ஆமாம், லைப்ரரிக்கு பக்கத்துல..."
"இங்க மியூசியம் தான் இருக்கு. அது தான் இந்தியாவிலேயே இரண்டாவது பழமையான மியூசியம். சுத்தி பார்க்க நிறைய இன்ட்ரஸ்டிங்கான விஷயம் இருக்கும்..."
"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம, உக்காந்து பேசுற மாதிரி ஒரு இடம் வேணும்"
அருங்காட்சியகத்திற்கு எதிரில் தன் வண்டியை நிறுத்திய நந்து,
"நீ லைப்ரரியில மெம்பர்ஷிப் வாங்கணும்னு சொன்னியே?" என்றான்.
தன்னுடைய நூலக உறுப்பினர் அட்டையை அவனிடம் காட்டி,
"நான் ஏற்கனவே மெம்பர் ஆயிட்டேன்" என்றாள்.
நந்தாவிற்கு புரிந்து போனது, அவள் அதற்காக அவனை அழைத்து வரவில்லை என்பது. அவன் வந்த வேலை சுலபமாய் முடியும் போல் தெரிந்தது.
"நீ என்கிட்ட எதை பத்தி பேசணும்?"
"வேற எதை பத்தி பேச போறேன்? உங்க அண்ணனை பத்தி தான்... அவன் என்னை தூங்க விடாம படுத்தி வைக்கிறான்"
"என்ன ஆச்சு குஷி? அவன் என்ன செஞ்சான்?"
"அவன் ஏன் இப்படி இருக்கான்? எது அவனை இப்படி மாத்தி வச்சிருக்கு? ஏன் நந்து?"
"டென்ஷன் ஆகாத..."
"எப்படி டென்ஷன் ஆகாம இருக்கிறது? அதுக்காகத்தான் அவனைப் பத்தி தெரிஞ்சுக்க நினைக்கிறேன்"
அவர்கள் மரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த ஒரு மேடையின் மீது அமர்ந்தார்கள்.
"என்ன ஆச்சுன்னு எனக்கு சொல்லு"
"அவன் சென்னையில படிச்சுக்கிட்டு இருந்தப்போ தான் அந்த விஷயம் நடந்தது. அவனுக்கு ஆகாஷ்னு ஒரு ஃபிரண்ட் கிடைச்சான். ரெண்டு பேரும் ரொம்ப க்ளோசா இருந்தாங்க. உனக்குப் பிறகு அவனுக்கு ஒரு நல்ல கம்பானியன் கிடைச்சிருக்கான்னு அர்னவ் அடிக்கடி சொல்லுவான்"
YOU ARE READING
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...