43 தொலைந்த இடைவெளி
*நீ சொல்றது சரி தான். உனக்கு என்னை பத்தி தெரிஞ்சதை விட நான் ரொம்ப பலவீனமானவன். என்னோட கட்டுப்பாட்டை இழக்க செய்ய, நீ என் பக்கத்துல வரணும்னு கூட அவசியமில்ல. நீ ஒரு ஸ்மைல் பண்ணாலே போதும். அந்த உண்மையை ஒத்துக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஏன்னா, உன் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நான் உன்னை காதலிக்கிறேன்* என்ற அவனது வார்த்தைகளைக் கேட்டு மலைத்து நின்றாள் குஷி.
அவளது பிடிவாதத்தை மீறிய ஒரு புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது. தன் மனம் கவர்ந்தவர்களுக்காக தனது ஈகோவை எல்லாம் ஒதுக்கி வைக்கும் போது ஒரு ஆண் அழகாக தெரிகிறான்.
*அவன் அவ்வளவு பலவீனமானவனா இருந்தா, நான் அவன்கிட்ட நெருங்கி போன போது, எதுக்காக அவன் என்கிட்ட இருந்து விலகிப் போனான்? நான் அவன்கிட்ட போனா, அவன் உண்மையிலேயே தன்னுடைய கண்ட்ரோலை இழந்துடுவானா? என்னை அவன் அந்த அளவுக்கா காதலிக்கிறான்? அவனோட வார்த்தையை அவன் எந்த அளவுக்கு காப்பாத்துறான்னு பார்க்கலாம்* என்று எண்ணினாள் குஷி.
தான் கூறியது படியே, அவளை எந்த தொந்தரவும் செய்யவில்லை அர்னவ். தன் சேட்டைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நல்ல பிள்ளையாய் நடந்து கொண்டான். அது அவளுக்கு பிடித்திருந்தது என்று கூறுவதற்கில்லை.
தங்கள் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் குஷி. வழக்கம் போலவே அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான் அர்னவ். அவன் அவளைப் பார்த்து சிரிக்கும் வரை, அவனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் அவளை பார்த்து புன்னகைத்தவுடன், தன் முகத்தை திருப்பிக் கொண்டாள், அது தனக்கு முக்கியமில்லை என்பது போல.
முகம் கை கால்களை கழுவிக்கொண்டு தரை தளம் சென்றான் அர்னவ். அவன் எங்கே செல்கிறான் என்பதை தெரிந்து கொள்ள, மெல்ல அவனை பின் தொடர்ந்தாள் குஷி. அவன் சமையலறைக்குள் நுழைவதை கண்ட அவள் முகம் பிரகாசம் அடைந்தது. அவளது யூகம் சரி தான். அவன் அவர்கள் இருவருக்கும் தேநீர் தயாரித்து கொண்டு வருவான்.
YOU ARE READING
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...