48 உல்லாசம்
நன்றாய் உறங்கி விட்ட அவர்கள், இருவரும், மாலை கண் விழித்த பின், மதிய உணவை உண்டார்கள்.
"நம்ம இப்போ கார்பின்ஸ்கோ பீச்சுக்கு போகலாமா?" என்றாள் குஷி.
"இன்னைக்கு எந்த ப்ரோக்ராமும் கிடையாது. சீக்கிரம் தூங்கணும். நாளைக்கு காலையில சீக்கிரமா கிளம்ப வேண்டி இருக்கும்"
"நம்ம நாளைக்கு எங்கயாவது போறோமா?" என்றாள் ஆர்வமாய்.
"ஆமாம்"
"ஆனா நம்ம எங்கேயும் போக மாட்டோம்னு சொன்னியே.."
"இது ஒரு முக்கியமான இடம். அதனால தான்"
"அவ்வளவு என்ன முக்கியம்?"
"அதை நாளைக்கு நீயே தெரிஞ்சுக்குவ"
"இப்போ சொல்ல மாட்டியா?"
"மாட்டேன்"
"எப்படி இருந்தாலும், நாளைக்கு காலையில் எனக்கு தெரிய தானே போகுது?"
அவளை கிண்டலாய் பார்த்து அவன் சிரிக்க, அவள் முகம் சுருக்கினாள். அப்பொழுது அவனது கைபேசி ஒலித்தது. அதில் அவனது அம்மாவின் பெயர் ஒளிர்ந்தது. அந்த அழைப்பை ஏற்ற அவன்,
"ஹாய், மா" என்றான்.
"ஃப்லைட் ஜர்னி எப்படி இருந்தது? ஒன்னும் பிரச்சனை இல்லையே?"
"ஒன்னும் பிரச்சனை இல்லம்மா"
"குஷி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா?"
"பக்கத்துல தான் இருக்கா" என்று தன் கைபேசியை அவளிடம் கொடுத்தான் அவன்.
"ஹாய் ஆன்ட்டி...."
"ஹாய், நல்லா இருக்கல?"
"ரொம்ப நல்லா இருக்கேன்"
"இப்போ எங்க இருக்கீங்க?"
"ஹோட்டல் ரூம்ல தான்"
"ஹோட்டல் ரூம்லயா? நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது சுத்திகிட்டு இருப்பீங்கன்னு நெனச்சேனே..."
"நாளைக்கு காலையில தான் போறோம் ஆன்ட்டி"
"அப்படியா? எங்க போறீங்க?"
YOU ARE READING
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...