1 காதல் என்பது...
சென்னையின் குறிப்பிடத்தக்க இடங்களில் முக்கியம் வாய்ந்தது பெசன்ட் நகர். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒருங்கே கிடைக்கப் பெறக்கூடிய அமைதியான இடம். கடற்கரையின் முகப்பில் அமைந்த இடம் என்பதால், அதற்கு தனி மதிப்பு உண்டு. உயர்தர மக்கள் வாழும் அமைதியான இடம். ஆனால் இப்பொழுது, அதற்கு முற்றிலும் மாறான விஷயம் நம் காதில் விழுகிறது.
அந்த காலை வேளையில், பெசன்ட்நகர் கடற்கரையில், பலரும் வழக்கமான உடற்பயிற்சிகளும், ஓட்ட பயிற்சியும் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண், ஜாகிங் உடை அணிந்திருந்த ஒருவனை திட்டிக் கொண்டிருந்தாள்... இல்லை, சபித்துக் கொண்டிருந்தாள்...!
"நீ என்ன ஆகப் போறேன்னு பாரு அர்னவ்...! இன்னைக்கு நான் வேதனைப்படுற மாதிரி நீயும் ஒரு நாள் வேதனைப்படுவ. என்னை மாதிரியே நீயும் காதலுக்காக ஏங்குவ. ஆனா, அது உன்னை விட்டு ஓடிப் போகும். ஒவ்வொரு நாளும் அதை நினைச்சு நினைச்சு நீ சாவ...!" என்று கூக்குரலிட்டாள் அந்தப் பெண்.
அவளுடன் இருந்த மற்றொரு பெண், அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றாள். அர்னவ் என்று பெயர் பெற்ற அவனோ, அவளுடைய சாபத்தால் எந்த பாதிப்பும் அடைந்ததாய் தெரியவில்லை. அவளையோ, அவளது சாபத்தையோ அவன் மதிக்கவே இல்லை. அவளை வீணான காகிதத்தை பார்ப்பது போல் பார்த்துவிட்டு தன் இருசக்கர வாகனத்தை கிளப்பிக் கொண்டு சென்றான் அவன்.
"போதும் நிறுத்து, நிஷா. எதுக்காக இப்படி நடந்துக்கிற? நான் தான் அவனைப் பத்தி முன்னாடியே உன்கிட்ட சொன்னேனே...! அவன் அப்படித்தான்னு உனக்கு தெரியாதா? அவன் இதயமே ஒரு கல்லு. மத்தவங்க இதயத்தை உடைக்கிறத பத்தி அவன் கவலைப்பட்டதே கிடையாது. அவனை நம்பினது உன்னோட தப்பு"
"அவன் என்னை இப்படி நம்ப வச்சு கழுத்தறுப்பான்னு நான் நினைக்கவே இல்ல, மீனா. நான் அவனை எவ்வளவு காதலிச்சேன் தெரியுமா? ஆனா அவன், என்னை இப்படி செய்யலாமா?"
ESTÁS LEYENDO
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...