27 புதியவன்
தன் வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்த குஷி, தேநீர் பருகியபடி கடலை பார்த்துக்கொண்டு அர்னவ்வை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனது சமீபத்திய நடவடிக்கைகள் அவளுக்கு நடுக்கத்தை தந்தது. எவ்வளவு தான் யோசித்தாலும் அவளது மூளை வேலை செய்யவே இல்லை.
திடீரென்று அவள் கண்ணில் கூரிய ஒளி தாக்கியதால், கண்களை மூடினாள். எவ்வளவு முயன்றபோதும் அவளால் கண்களை திறக்க முடியவில்லை. கண்ணாடியில் பட்டு பிரதிபலித்த சூரிய ஒளி தான் அவளை கண்களை திறக்க விடாமல் செய்தது. தன் கையால் அந்த ஒளியை மறைத்துக் கொண்டு கண்களை திறந்தாள். தன் கையில் ஒரு கண்ணாடியுடன் அடுத்த பால்கனியில் சிரித்தபடி நின்றிருந்தான் அர்னவ். அவனைப் பார்த்து வாயை பிளந்தாள் அவள்.
அங்கிருந்து செல்லலாம் என்று அவள் திரும்பிய போது, அவளது கைபேசி ஒரு குறுந்தகவலை சுமந்து வந்து க்றீச்சிட்டது. அது அர்னவ்விடமிருந்து வந்திருந்ததை பார்த்தபோது அவளுக்கு வியப்பாய் இருந்தது. அதே வியப்போடு அவள் அவனைப் பார்க்க, அந்த தகவலை திறந்து படி என்பது போல் சைகை செய்தான். விருப்பம் இல்லாதவள் போல் அதை திறந்து படித்தாள்.
*எனது உண்மை சுரூபத்தை நான் பிரதிபலிக்க துவங்கி விட்டால்,
நீ என் முன் நிற்க முடியாமல் இப்படித்தான் ஓட வேண்டும்*அது அவளது ஈகோவை தட்டிப் பார்த்தது. மீண்டும் தன் பழைய இடத்தில் வந்து தெனாவெட்டாய் நின்று கொண்டாள். அதைப் பார்த்து கள்ளச் சிரிப்பு சிரித்தான் அவன். மீண்டும் அவனிடமிருந்து ஒரு தகவலை பெற்றாள் அவள்.
*பார்த்தாயா, உன்னை
எப்படி என் விருப்பப்படி இங்கேயே நிற்க வைத்தேன் என்று...?*அவளுக்கு பற்றி கொண்டு வந்தது. மீண்டும் அவளுக்கு ஒரு தகவல். அவனை அவள் எள்ளலுடன் பார்க்க, அவன் சாதாரணமாய் புன்னகைத்தான். தனக்கு துளியும் விருப்பமே இல்லை என்பது போல் அந்த தகவலை அவள் திறந்து படித்தாள்.
![](https://img.wattpad.com/cover/364288753-288-k505648.jpg)
ESTÁS LEYENDO
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...