47 தேன்நிலவு

706 49 2
                                    

47 தேன்நிலவு

அர்னவ்வும் குஷியும் தேனிலவிற்கு செல்ல தயார். தங்கள் பெட்டி படுக்கையுடன் அவர்கள் தரைதளம் வந்தார்கள். அவர்களை வழி அனுப்புவதற்காக விமான நிலையம் செல்ல, அரவிந்தன், ரத்னா, நந்தா மற்றும் லாவண்யா ஆகியோர் தயாராகி இருந்தார்கள்.

"மா, இதுக்காக நீங்க எல்லாரும் எங்க கூட வரணும்னு அவசியமா?" என்றான் அர்னவ்.

"பின்ன? கல்யாணம் ஆகுமா ஆகாதான்னு தெரியாம இருந்த என் பிள்ளை, இன்னைக்கு ஹனிமூனுக்கு போறானே... அவனை வழி அனுப்ப வந்த சந்தர்ப்பத்தை எப்படி நான் மிஸ் பண்றது?"

"அவ சொல்றது சரி தான். நீ எங்களை தடுக்க முடியாது" என்றார் அரவிந்தன்.

"ஆமாம், டைமை வேஸ்ட் பண்ணாம கிளம்பு" என்றான் நந்தா.

"நீங்க எப்போ மணாலிக்கு போறீங்க?" என்றாள் குஷி.

"நாளனைக்கு கிளம்பறோம்" என்றான் நந்தா.

"அங்க எடுக்கிற போட்டோஸ் எல்லாம் எனக்கு அனுப்பு" என்றாள் குஷி.

"நீயும் உங்க போட்டோசை எங்களுக்கு அனுப்ப மறக்காதே" என்றாள் லாவன்யா.

"நிச்சயமா அனுப்புறேன்"

அவர்கள் விமான நிலையம் சென்றடைந்தார்கள்.

"அங்க போனதுக்கு அப்புறம் எங்க ஞாபகம் உனக்கு வந்தா, எங்களுக்கு ஃபோன் பண்ணு, என்றார் ரத்னா.

"மா, போதும் நிறுத்துறீங்களா?" என்றான் அர்னவ்.

தங்கள் பெட்டியை இழுத்தவாறு அவன் நடக்கத் தொடங்கினான். அவனது மற்றொரு கரத்தை, குஷியின் கை வளைத்து பிடித்திருந்தது. உள்ளே நுழையும் முன் அவர்களை பார்த்து கையசைத்து விட்டு அவர்கள் சென்றார்கள்.

விமானம் டேக் ஆஃப் ஆவதை பார்க்கும் ஆவலில், வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த குஷியின் பக்கத்தில் அமர்ந்தான் அர்னவ். விமானம் மேலெழுந்த பிறகு, வானத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படாதே...! விமானம் மேலே எழும்பும் போதும், தரையிறங்கும் போதும் மட்டும் தான் நாம் பறந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படும். விமானம் மேலே எழும்பிய போது, அவன் கைகளுடன் தன் கைகளை பிணைத்துக் கொண்டாள் குஷி. பிறகு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவனும் தன் தலையை அவள் தலை மீது சாய்த்து கொண்டான்

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)Onde histórias criam vida. Descubra agora