பல்லவியிடமிருந்து உறக்கத்தை மொத்தமாக வாங்கிவிட்டு அவள் அருகில் அமைதியாக உறங்கி கொண்டிருந்தான்கார்த்திக் . பல்லவிக்கு எப்பொழுது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை நன்றாக உறங்கி விட்டாள்.
காலையில் எழுந்திரிக்க முயற்சித்தவள் தன்மேல் ஏதோ இருப்பது போல உணர்வு வர என்ன வென்று பார்த்தாள் கார்த்திக் தன்னுடைய கைகளை பல்லவியின் வயிற்றின் மீது போட்டிருந்தான்.
பல்லவி அவனது கைகளை எடுக்க முயற்சித்தாள் ஆனால் முடியவில்லை
பல்லவி : என்னங்க
கார்த்திக், :ம்ம்ம்
பல்லவி :கொஞ்சம் கை எடுங்க நான் போகணும்
கார்த்திக் :என்ன பில்லோவ் நீ பேசுற
பல்லவி :என்ன பாத்தா பில்லோவ் மாதிரி இருக்கா என்ன
இந்த முறை சற்று குரலை உயர்த்தி கார்த்திக்கை அழைத்தாள் ஆனால் அவன் உறக்கம் கலையவில்லை அவளின் மீது காலை போட வந்தவன் ஏதோ கடவுள் புன்னியத்தில் கண்ணை திறந்தான்
கார்த்திக் :பல்லவி நீங்க ஏன் என்கிட்ட படுத்திருக்கீங்க
பல்லவி, :நீங்க எங்கங்க உங்களை விட்டு தள்ளி இருக்க விட்டிங்க
அவள் அவ்வாறு சொன்ன பிறகே அவள் தன் கைப்பிடியில் இருப்பதை உணர்ந்தான்
கார்த்திக் :ஐ யாம் சாரி பல்லவி.
பல்லவி, :பிரவாயில்லை கார்த்திக் ஆனா இப்போவது கையை எடுக்குறீங்களா ஸ்கூலுக்கு டைம் ஆகுது
கார்த்திக் :சாரி (இப்பொழுதுதான் அவளை விடுவித்தான் )
பல்லவி பழைய நிலையில் இருந்திருந்தால் இதை ரசித்திருப்பாள் ஆனால் இப்போது இவை எல்லாம் இன்னோரு பெண்ணுடைய உரிமை இங்கே தனக்காக கார்த்திக் மனதில் எதுவும் இல்லை என்ற நிதர்சனத்தை அறிந்ததால் பல்லவி இதை ரசிக்கவில்லை கார்த்திக்கும் இதை கவனித்தான் .
YOU ARE READING
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
General Fictionதிருமணத்திற்கு பிறகு வரும் காதல்