தாரமே-23❤️❤️

609 23 29
                                        

கீர்த்தி ஆதர்ஷிடம் " எனக்கு என்னமோ இதுல ஒரு குழப்பம் இருக்க மாதிரி இருக்கு...எவளோ ஒருத்தி வந்து என்னோட அக்கா மாமாவ பிரிக்க முடிஞ்சுருமா??..நாளைல இருந்து நம்ம இன்வெஸ்டிகேஸன ஸ்டார்ட் பண்றோம் ரெடியா இரு..!!" என்க்ஷு என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அனிதா உள்ளே நுழையவும் பேச்சை மாற்றும் விதமாக " ஓகே டி பாய்..குட் நைட் ..டேக் கேர்..!!" என்று கூறிவிட்டு மொபைலை வைத்தாள்.. மறுமுனையில் ஆதர்ஷ் 'இவளுக்கு என்ன பைத்தியமா?? நடு ராத்திரியில கால் பண்ணி லூசு மாதிரி பேசுறா!!' என்று நினைத்துக் கொண்டே தன் தூக்கத்தை தொடர்ந்தான்..

அனைவரும் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.. அப்போது அனிதாவின் அம்மா அனியிடம்" ஆனந்த ராஜன் சார் வீடு எங்கம்மா ??.. அவருக்கு கண்டிப்பா நம்ம நன்றி சொல்லியே ஆகனும் ..." என்று கூறிக் கொண்டு இருந்தபோது உள்ளே நுழைந்தனர் ஆனந்த ராஜனின் குடும்பத்தினர்... அவர்கள் உள்ளே நுழைவதை பார்த்ததும் அனைவரும் எழுந்தனர்..ஆனந்த ராஜனை உற்று நோக்கிய அனிதாவின் அப்பா " டேய் ஆனந்தூ..என்று கூறிக்கொண்டே அவரை கட்டி கொண்டார்..ஆம் இருவரும் பால்ய நண்பர்கள்..ராஜனை அடையாளம் கண்டவுடன் இருவரும் நலம் விசாரித்தனர்.." ஆனந்த் ரொம்ப தேங்க்ஸ் டா..நாங்க பக்கத்தில இல்லாதப்போ எங்க நல்லா பாத்துக்கிட்டதுக்கு..என்று உணர்ச்சிமிக்க நன்றி கூறினார்..அவரை தட்டி கொடுத்தவர்.." டேய் ராஜா ..அனிதா நம்ம பொண்ணுடா..என்று உண்மையான பாசத்துடன் கூறினார்..பின் அவர்களை தங்கள் வீட்டிற்குள் அழைத்து அமர செய்தனர்.. அப்போது தான் அங்கே அனிஷ் இருப்பதை கவனித்த ஆனந்த ராஜன் " மிஸ்டர்.அனிஷ் நீங்க எப்படி இங்க???" என்று புரியாமல் கேட்டார்.." உனக்கு தெரியாதாடா?? அனிஷ் தான்டா எங்க மாப்பிள்ளை..அனிதாவோட ஹஸ்பன்ட்.." அதை கேட்டதும் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தனர் தந்தையும் மகனும்..அனிதாவை வேதனை தரும் விழிகளில் நோக்கிய ராகுலை பார்த்து அவளுக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தாள்..இதை அனைத்தையும் கண்களில் கோபத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் அனிஷ்...

Tharame Tharame ❤Место, где живут истории. Откройте их для себя