94

345 17 8
                                    

நந்தனா ஒரு பெருமூச்சு விட்டு "இருந்தாலும் ஆனந்தி பாவம் டி... மனசுல ஒருத்தனை நினைச்சுக்கிட்டு இன்னொருத்தன் கட்டுன தாலி கழுத்துல வாங்கிக்கிட்டு நரக வேதனை டி..."என்று சொல்ல‌...

ஆனந்தி : போதும் டி நந்து... அவ கொஞ்ச கொஞ்சமா மாறிக்குவா... திரும்ப திரும்ப நீங்க எல்லாரும் இப்படியே பேசிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்‌‌... அவ இருக்கும் போது உதய் பத்தி யாரும் பேசாதீங்க... அது தான் உங்களுக்கும் நல்லது அவளுக்கும் நல்லது... அவளுக்கு னு தனி குடும்பம் இருக்கும்...

         இனி அவளுக்கு குணா தான் எல்லாமே... இதுக்கு மேல நம்ம ஒன்னும் பண்ண முடியாது‌... ஆனந்தி ய நினைச்சு நீங்க feel பண்றதா இருந்தா அவ இருக்கும் போது பண்ணாதீங்க... தனியா hotel ல room போட்டு feel பண்ணுங்க... நீங்க இதையே பேசிக்கிட்டு இருந்தீங்க னா மனச மாத்தி குணா கூட வாழனும் நினைக்கவே மாட்டா...

           இதுல ஆனந்தி வாழ்க்கை மட்டும் இல்ல அப்பாவியா எதுவுமே தெரியாம ஆனந்தி ய கல்யாணம் பண்ணி இருக்கானே குணாளன் அவனோட வாழ்க்கையும் இருக்கு... அத முதல ஞாபகம் வச்சுக்கோங்க.. இன்னிக்கி தான் last இனி உதய் பத்தி யாருமே பேசாதீங்க... ஆனந்தி நல்லா இருக்கனும் நினைச்சா...

நந்தனா : சரி பேசல... இனிமே உதய் ஹ பத்தி பேசல... ஆனா உதய் ஹ கண்டு பிடிக்கனுமே...எப்படி அவனுக்கு என்ன ஆச்சு னு இது வரைக்கும் எதுவுமே தெரியல... மதன் உயிரை காப்பாத்தி இருக்கான்... ரிஷி ய கண்டு பிடிக்க help பண்ணி இருக்கான்... நமக்கு help பண்ண போய் தான் கால உடைச்சுக்கிட்டு hospital ல இருந்தான்... எல்லாம் நமக்காக தான்... இப்ப அவன் காணாம போயிட்டான்... அவன் யாரோ தானே னு அப்படியே விட சொல்றீயா ஆர்த்தி...

ஆர்த்தி : நா அப்படி சொல்லல... உதய் பத்தி கொஞ்ச நாள் மட்டும் அவளுக்கு தெரிய வேணாம் னு தான் சொல்றேன்‌... உதய் ஹ மறந்து குணா கூட அவ வாழ ஆரம்பிச்சுட்டா எல்லாம் சரியா போயிரும்... அப்புறம் உதய்யே அவ முன்னாடி வந்து நின்னா கூட அவ எதையும் நினைக்க மாட்டா...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Место, где живут истории. Откройте их для себя