என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 2"ஒருமுறை இருமுறை பலமுறை
கேட்டபின்
இதயத்தின் கிளையினில்
பூத்தாளே...
என்று ரிஷி பாடிக் கொண்டு வர...எதிரே வந்த அங்கே வேலை பார்க்கும் சுரேஷ் அவனைப் பார்த்து என்னடா ரிஷி யாரு பூத்தது...? என்று கேட்க...
ரிஷி :"அது உன் ஆயா தாண்டா..." என்று முறைக்க...
சுரேஷ் ரிஷியை ஒரு பார்வை பார்த்துவிட்டு "அப்படியா அப்ப எனக்கு நீ தாத்தாவா ஓகே தாத்தா.."என்று சொல்ல...
ரிஷி : அடிங்க என்ன நக்கலா டா எதுக்கு டா என்ன தாத்தாங்குற..
சுரேஷ் : நீ தானடா சொன்னேன் என் இதயத்தில் பூத்தது எங்க ஆயானு. அவங்க எனக்கு ஆயா னா நீ எனக்கு தாத்தா தானே என்று சொல்லிக்கொண்டு ஓட...
ரிஷி :"இன்னிக்கு நீ செத்தடா மவனே..." என்று அவனை துரத்திகொண்டு ஓட அங்கு கௌதமும் ஆர்த்தியும் நின்று சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்...
ரிஷி :"என்ன ரெண்டு பேரும் சிரிச்சிட்டு இருக்காங்க... ஒருவேளை நம்ம காலையில பேசுனத கேட்டு பயபுள்ள ஆர்த்தி கிட்ட love வ சொல்லிடுச்சோ...இருக்காதே...நம்ம ஆளு இப்படி பண்ண மாட்டானே... அவனுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லையே..." என்று நினைத்துக்கொண்டு அவர்கள் அருகில் செல்ல...
அவர்களோ வேறுபக்கம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்....
ரிஷி :"என்ன look வேற எங்கேயோ போகுதே...ஒரு வேலை பவர் ஸ்டார் எதுவும் வந்து இருப்பாரோ..."என்று நினைத்துக்கொண்டு அங்கு பார்க்க...
அங்க கேபினில் முரளியும் நந்தனாவும் editor பார்த்திபனிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தனர்...
ரிஷி வேகமாக கௌதம் பக்கத்தில் போய் நின்று "என்னடா ஆச்சு..."என்று பதற்றதோடு கேட்க...
கௌதம் :"இல்லடா ரிஷி அங்க பாரு முரளியும் நந்தனாவும் tension கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க..." என்று சிரித்துக்கொண்டே சொல்ல
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்