என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 31அனைவரும் வாசல் பக்கம் பார்க்க...
சுவாதி கோவமா நின்றாள்...
முரளி : ஏய்..சுவாதி உள்ளவா ஏன் வாசலையே நிக்கிற...
சுவாதி : "இங்கே என்ன நடக்குதுனு நான் கேட்டேன்.. அதுக்கு முத பதில் சொல்லு..."என்று கோவமாக கத்த...
கௌதம் :எதுக்கு இவ்ளோ கோவம் ஏன் இப்படி கத்துற.. என்னாச்சு சொல்லு சுவாதி ...
சுவாதி : என்னது.. கத்துறேனா... நீ வாய மூடுடா...
"நல்ல மரியாதையா பேசுறா".. என்ற கௌதம் நினைக்க...
ஆர்த்தி : உனக்கு இது தேவையா முரளி தான் பேசிட்டு இருக்கான்ல... உன்னை யாரு இடையில வாயை கொடுக்க சொன்னது...
கௌதம் :"இல்லமா... ரொம்ப கோவமா இருக்கா என்னனு கேட்டேன்... ஏதாவது prob இருக்குமோனு.."என்று இழுக்க...
ஆர்த்தி : நீ வாய மூடிட்டு இரு அவளே சொல்லுவா...
முரளி : சுவாதி நீ மொத உள்ள வா... உட்கார்ந்து பொறுமையாக பேசலாம் கோபப்படாத என்னன்னு சொல்லு...
சுவாதி :"உன்கிட்ட நான் அப்புறம் பேசுறேன்"என்று சொல்லி உதய் பக்கத்தில் சென்று அவர் சட்டையைப் பிடித்து "உன்கிட்ட நான் என்ன work கொடுத்தேன் நீ அதை பார்க்காமல் இங்க வந்து இவங் கூட உக்காந்து சிரிச்சு கூத்து அடிச்சுட்டு இருக்கேன்"...
முரளி :"ஏய்.. சுவாதி என்ன பண்ற.."என்று வேகமாக சுவாதியை கையை பிடிக்க சென்றவன்...நந்தனா முரளியை முறைக்க அப்படியே நின்றான்..
முரளி :சுவாதி அவன் சட்டையை விடு..எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம் இப்ப அவன் சட்டையில் இருந்து கையை எடு..
சுவாதி :"உன் மேல செம கோவத்துல இருக்கேன் முரளி... பேசாம போயிரு.. உன்கிட்ட நான் அப்புறம் பேசுறேன் சொன்னேன்.. இவன் விஷயத்தில் நீ தலையிடாதே போயிரும்"...என்று சொல்லி விட்டு உதய் சட்டையை இறுக்க பிடித்து"நான் உன்கிட்ட என்ன சொன்னேன் ஆனா நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க"என்றாள் கோபமாக
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்