6

687 22 0
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 6

மூவரையும் எரிப்பது போல் பார்த்துக்கொண்டிருந்த கௌதமை பார்த்த ரிஷி "இவன் எதுக்கு இப்டி முறைக்கிறான்..." என்று நினைத்து கொண்டு "டேய்...ஏன்டா இப்படி முறைக்கிற..." என்று கேட்க...

ரிஷி அருகில் வந்த கெளதம் அவனை குனிய வைத்து முதுகில் அடித்தான்...

"அடேய்... எதுக்கு டா அவன அடிக்குற.." என்று கௌதமை பிடித்து இழுத்த முரளியை குனிய வைத்து அவனையும் முதுகில் அடித்தான்...

ரிஷியை அடித்தபோது சிரித்துக் கொண்டு இருந்த நந்தனா முரளியை அடித்தபோது கௌதமை முறைத்தவாறு சட்டையை பிடித்து இழுத்து அவன் தலையில் 'ணங்' என்று கொட்டினாள்...

"அய்யோ...ஏன்டி கொட்டுன..." என்று தலையை தடவியபடி கௌதம் நந்தனாவை முறைக்க...

நந்தனா :எதுக்கு டா அவங்க இரண்டு பேரையும் அடிச்ச...

கௌதம் :வர்ற கோவத்துக்கு உங்க மூணு பேரையும் அடிக்க தான் வந்தேன்..பசி உயிர் போகுது.. நீங்க என்னடான்னா இங்க ஒக்காந்து கதை அடித்துவிட்டு இருக்கீங்க.. மனுஷன் சாப்பிடுவதா இல்லையா.. உங்க ரெண்டு பேரையும் காணானு தேடிட்டு வந்த இவனும் உங்க கூட நின்று சிரிச்சுகிட்டு இருக்கான்... பசியில மயக்கம் போட்டு விழுந்து விடுவேன் போல..." என்று கத்திக்கொண்டு முரளியை முறைத்தான்...

முரளி :டேய்...sorry டா மச்சான்... இவங்க ரெண்டு பேரையும் கூப்பிடலாம் தான் வந்தேன்.. இங்க வந்து பார்த்தா இவங்க ரெண்டு பேரும் அந்த ஜொள்ளு கிட்ட மாட்டிகிட்டு முழிச்சாங்க... ஜொல்லு கிட்ட இருந்து இவங்க ரெண்டு பேரையும் காப்பாத்த நான் பட்ட பாடு இருக்கே ஐயோ... முடியலடா சாமி அவன்கிட்ட பேசிய Energy எல்லாம் போச்சு... இன்னைக்கு உன்னோட சாப்பாடு சேர்த்து தான் சாப்பிட போறேன்...

கௌதம் :அடிங்க... கொய்யால நானே பசி மயக்கத்துல கிடக்கிறேன்.. உன்னோட சாப்பாடு ஆட்டையை போட்டு நான் சாப்பிடலாம் நினைச்சேன் நீ என் சாப்பிடல கை வைக்கிறியா‌.. கொன்றுவேன்... என்று சொல்லி முரளியை தள்ளி விட்டு வேகமாக canteen நோக்கி ஓடினான்...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now